ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கினார் அமைச்சர்

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கினார் அமைச்சர்
Updated on
1 min read

சென்னை: ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றிய 831 செவிலியர்​களுக்கு பணி நிரந்தர ஆணையை சுகா​தா​ரத் ​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார்.

சென்​னை, கிண்​டி​யில் உள்ள, தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக்​கழகத்​தில் நேற்று ஒப்​பந்த அடிப்​படை​யில் பணி​யாற்​றிய 831 செவிலியர்​களுக்கு பணி நிரந்தர ஆணையை சுகா​தா​ரத்​ துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார்.

சுகா​தா​ரத் ​துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், மருத்​து​வம் மற்​றும் ஊரக நலப்​பணி​கள் இயக்​குநர் சித்​ரா, பொது சுகா​தா​ரம் மற்​றும் நோய்த்​தடுப்பு மருந்​துத் ​துறை இயக்​குநர் சோமசுந்​தரம், மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, குடும்​பநலத்​ துறை இயக்​குநர் சத்யா மற்​றும் கூடு​தல் இயக்​குநர்​கள், செவிலியர்​கள் மற்​றும் செவிலியர் சங்க நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

அப்​போது, அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் ஒப்​பந்த அடிப்​படை​யில் நியமிக்​கப்​பட்​ட​வர்​களில், அவர்​களது ஆட்​சி​யில், 1,600 பேர் மட்​டுமே பணி நிரந்​தரம் செய்​யப்​பட்​டனர்.

ஆனால், நான்​காரை ஆண்டு திமுக ஆட்​சி​யில் 5,825 பேர் பணி நிரந்​தரம் பெற்​றுள்​ளனர். மீத​முள்ள 5,932 பேர் பணி நிரந்​தரம் செய்ய வேண்​டி​யுள்​ளது. மீண்​டும் திமுக ஆட்​சிக்கு வரும். அப்​போது இவர்​கள் பணி நிரந்​தரம் செய்​யப்​படு​வார்​கள்.

ஊதிய உயர்வு வழங்​கப்​படும்: தற்​போது பணி நியமன ஆணை​ வழங்​கப்​பட்டவர்கள், பொங்​கலுக்கு பின் கலந்​தாய்வு மூல​மாக அவர்​கள் பணி​யாற்​றும் இடங்​களை தேர்வு செய்​ய​லாம். இந்த விவ​காரத்​தில் இடைத்​தரகர்​களை யாரும் நம்ப வேண்​டாம். கடந்த 20 ஆண்​டு​களுக்கு மேலாக பணி​யாற்றி வரும் 1,325 பகுதி நேர மகப்​பேறுபணி​யாளர்​கள் மாதம், ரூ.1,500 மட்​டுமே சம்​பளம் பெறுகின்​றனர்.

அவர்​கள் தங்​களுக்​கு, ரூ.5,000 உயர்த்தி வழங்க வேண்​டும் என கோரிக்கை வைத்​துள்​ளனர். அவர்​கள் கோரிய தொகையை விட கூடு​தலாக அவர்​களுக்​கான ஊதிய உயர்வு வழங்​கப்​படும். வரும் 19-ம் தேதி அவர்​களிடத்​திலேயே அறிவிக்​கப்​படும். இந்த 4 ஆண்​டு​களில், 37,603 பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளன. இதில், 17,000 புதிய பணி​யிடங்​களை உரு​வாக்​கி​யிருக்​கிறோம். இவ்​வாறு அமைச்சர்​ தெரி​வித்​தார்​.

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 831 செவிலியர்களுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கினார் அமைச்சர்
கேஎம்சி மருத்துவமனையில் நோயாளிகளை பார்க்க வருபவர்களுக்கு இனி அடையாள அட்டை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in