“போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம்” - அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி

Minister Anbil Mahesh

அமைச்சர் அன்பில் மகேஸ்

Updated on
1 min read

சென்னை: “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை கைவிட மாட்டோம். நல்ல முடிவு எடுப்போம்” என அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதியளித்துள்ளார்.

சம வேலைக்கு சம ஊதி​யம் கோரிக்​கையை முன்​வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்​கம் (எஸ்​எஸ்​டிஏ) சார்​பில் சென்​னை​யில் டிச.26 முதல் தொடர் போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இதனையொட்டி, இது குறித்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் என்னுடைய குடும்ப உறுப்பினர்களை போன்றவர்கள். அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம்.

நாங்கள் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். போராட்டம் நடத்துபவர்கள் ஒரு கட்டத்தில் இருக்கிறார்கள். நல்ல முடிவை எடுப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதை போராட்டமாகவோ, ஆர்ப்பாட்டமாகவோ நான் பார்க்கவில்லை. தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே ஆசிரியர்கள் போராடுகிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “போராட்​டம் குறித்து எஸ்​எஸ்டிஏ பொதுச்​ செய​லா​ளர் ஜே.​ராபர்ட் கூறும்​போது, “ஒற்றை கோரிக்​கையை வலி​யுறுத்தி போராடி வரு​கிறோம். கடந்த தேர்​தலின்​போது எங்​கள் கோரிக்​கையை ஏற்ற திமுக, அதை தேர்​தல் வாக்​குறு​தி​யாக​வும் அறி​வித்​தது. ஆனால், இது​வரை நிறைவேற்​ற​வில்​லை. ஊதிய முரண்​பாடு களை​யப்​ப​டா​விட்​டால், பள்​ளி​கள் திறந்​த ​பிறகும் போராட்​டம் தொடரும். தமிழக அரசு எங்​களை அழைத்துப் பேசி கோரிக்​கையை நிறைவேற்ற வேண்​டும்” என்​றார்.

Minister Anbil Mahesh
“ஓய்வூதிய திட்ட அறிப்பில் முழு திருப்தி தருக” - முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in