மேட்டூர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்வு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை நீடிப்பு

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காவிரி நீர்.

ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காவிரி நீர்.

Updated on
1 min read

மேட்டூர்/தருமபுரி: கர்​நாடக மாநிலத்​தில் பெய்​து​ வரும் கனமழை​யால், கர்​நாட​கா​வில் உள்ள கபினி அணைநிரம்பியது. இதையடுத்​து, அணை​யில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்​றில் திறந்து விடப்​பட்டு வரு​கிறது. இதன் காரண​மாக நேற்று காலை விநாடிக்கு 19,119 கனஅடி​யாக இருந்த மேட்​டூர் அணை நீர்​வரத்​து, மாலை​யில் 19,264 கனஅடி​யாக அதி​கரித்​தது.

அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வெளி​யேற்றப்​பட்டு வரு​கிறது.அணைக்கு வரும் நீரின் அளவு, அதி​கரித்துள்ளதால், நீர்​மட்​டம் உயர்ந்து வரு​கிறது. கடந்த 2 நாட்​களில் 3 அடி உயர்ந்​துள்​ளது. தற்​போது அணை​யின் நீர்​மட்​டம் 76.18 அடி​யாக​வும், நீர் இருப்பு 38.25 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.

இதற்​கிடை​யே, தருமபுரி மாவட்​டம் ஒகேனக்​கல் காவிரி​யாற்​றில் நேற்று முன்​தினம்காலை விநாடிக்கு 20 ஆயிரம்கனஅடி​யாக பதி​வான நீ்ர்​வரத்​து, நேற்று காலை 19 ஆயிரம் கனஅடி​யாக குறைந்​தது. எனினும், அதிக நீர்​வரத்து காரண​மாக ஒகேனக்​கல்​லில் பரிசல் இயக்​கத்​துக்கான தடை மூன்​றாவது நாளாக நீடித்​தது. தொடக்​கத்​தில் செந்​நிறத்​தில் கலங்​கலாக வந்த காவிரி நீர்,தற்​போது சற்று தெளிவடைந்து வேக​மாக பாய்ந்து வரு​கிறது.

<div class="paragraphs"><p>ஒகேனக்கல் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் காவிரி நீர்.</p></div>
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை: ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in