92-வது ஆண்டை நிறைவு செய்த மேட்டூர் அணை: 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு பயன்படுகிறது

நீர்மட்டம் 85.17 அடியாக இருந்த நிலையில் கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

நீர்மட்டம் 85.17 அடியாக இருந்த நிலையில் கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.

Updated on
1 min read

மேட்டூர்: ​கா​விரி ஆற்​றின் குறுக்கே கட்​டப்​பட்ட மேட்​டூர் அணை 92 ஆண்​டு​களை நிறைவு செய்​து, 93-வது ஆண்​டில் அடி​யெடுத்து வைத்​தது.

கர்​நாடகா மாநிலத்​தில் உற்​பத்​தி​யாகும் காவிரி ஆறு தமி​ழ​கம் வழி​யாகச் சென்று கடலில் கலக்​கிறது. கர்​நாட​கா​வில் குறைந்த அளவு பகு​தி​யில் ஓடும் காவிரி ஆறு, தமி​ழ​கத்​தின் வழி​யாக 700 கிலோ மீட்​டர் தூரம் கடந்து செல்​கிறது. பரு​வ​மழை வரும்​போது நீர்த்​தேக்​கத்​துக்கு வழி​யில்​லாமல் விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்டு வந்​தனர்.

எனவே, பரு​வ​மழைக் காலங்​களில் காவிரி நீரைத் தேக்கி வைத்து விவ​சா​யத்​துக்​குப் பயன்​படுத்​தும் நோக்​கில், அப்​போதைய ஆங்​கிலேய அரசு 1925-ம் ஆண்டு மேட்​டூர் அணை கட்​டு​மானப் பணி​யைத் தொடங்​கியது. வடிவ​மைப்பு மற்​றும் கண்​காணிப்பு பொறி​யாள​ரான கர்​னல் எல்​லீஸ் தலை​மை​யில் ஆயிரக்​கணக்​கான தொழி​லா​ளர்​கள் பணி​யாற்​றிய நிலை​யில், 9 ஆண்​டு​களுக்​குப் பிறகு 1934 ஜூலை 14-ம் தேதி கட்​டு​மானப் பணி​கள் நிறைவடைந்​தன.

இவ்​வாறு ரூ.4.80 கோடி செல​வில் கட்​டப்​பட்ட அணை​யை, 1934 ஆக.21-ம் தேதி அப் போதைய சென்னை கவர்​னர் ஜார்ஜ் பிரெட்​ரிக் ஸ்டான்லி திறந்து வைத்து நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார்.மேட்​டூர் அணை​யின் நீளம் 5,300 அடி. நீர்த்​தேக்​கப் பகுதி 59.25 சதுர மைலும், மொத்த கொள்​ளளவு 93.5 டிஎம்​சி​யும் ஆகும். அணை​யின் உச்​சபட்ச நீர்​மட்​டம் 120 அடி.

அணை​யில் இருந்து திறக்​கப்​படும் தண்​ணீர் சேலம், கரூர், திருச்​சி, தஞ்சாவூர், திரு​வாரூர், நாகை உள்​ளிட்ட 12 மாவட்​டங்​களில் சுமார் 17 லட்​சம் ஏக்​கர் சாகுபடிக்கு பயன்​படுகிறது. அணை​யில் உபரி நீரை வெளி​யேற்ற 16 கண் மதகுகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. இவை தலா 20 அடி உயர​மும், 60 அடிஅகல​மும் கொண்​ட​வை.

இதற்கு அணை கட்​டிய கண்​காணிப்​புப் பொறி​யாள​ரான ‘கர்​னல் எல்​லீஸ்’ பெயர் சூட்​டப்​பட்​டுள்​ளது. மேட்​டூர் அணை கட்​டப்​பட்ட 1934 முதல் ஜூன் 12-ம் தேதி பாசனத்​துக்கு 20 முறை தண்ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளது. அதற்கு முன்​ன​தாக 11 முறை​யும், கால​தாமத​மாக 62 முறை​யும் தண்ணீர் திறக்​கப்​பட்​டுள்​ளன. பல சிறப்​பு​கள் வாய்ந்த மேட்​டூர் அணை தனது 93-வது ஆண்​டில் நேற்று அடி​யெடுத்து வைத்​தது.

நீர்​வரத்து சரிவு: இதனிடையே அணைக்கு நேற்று காலை விநாடிக்கு 10,579 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்​து, மாலை 10,414 கனஅடி​யானது. குடிநீர் தேவைக்​காக விநாடிக்கு 2,000 கனஅடி திறக்​கப்​பட்டு வரு​கிறது. நீர்​மட்​டம் 85.17 அடி​யாக​வும், நீர் இருப்பு 47.30 டிஎம்​சி​யாக​வும் உள்​ளது.

<div class="paragraphs"><p>நீர்மட்டம் 85.17 அடியாக இருந்த நிலையில் கடல் போல காட்சியளிக்கும் மேட்டூர் அணை.</p></div>
“முதல்வர் விஜய் சிரிப்பதை பார்க்க பேரவையில் தனி ஸ்கிரீன் வேண்டும்” - தவெக எம்எல்ஏ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in