மாணிக்கம் தாகூர் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ராஜேஷ்குமார் தகவல்

மாணிக்கம் தாகூர் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ராஜேஷ்குமார் தகவல்
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்​வுக்கு எதி​ராக தமிழகத்​தில் காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தலை​மை​யில் மாபெரும் போராட்​டங்​கள் நடத்​தப்​படும் என்று தமிழக சுற்​றுலா துறை அமைச்​சர் ராஜேஷ்கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து சென்னை சத்​தி​யமூர்த்தி பவனில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: இந்​தி​யா​வின் கல்வி முறை​யில் நில​வும் சுரண்​டல்​கள், முறை​கேடு​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் நோக்​கில் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தீவிர​மாக செயல்​பட்டு வரு​கிறார்.

நீட் தேர்வு பணக்​காரர்​களுக்கு மட்​டுமே சாதக​மானது. கடந்த 2016-க்கு முன்​பு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்​வு​களில் எடுக்​கும் மதிப்​பெண்​கள் அடிப்​படை​யில் மருத்​துவ சேர்க்​கைக்​கான தகுதி தீர்​மானிக்​கப்​பட்​டது. ஆனால், நீட் தேர்வு வந்த பிறகு, கிராமப்​புறமாணவர்​கள் கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இத்​தேர்​வால் மன உளைச்​சலுக்கு ஆளாகி தமிழகத்​தில் இது​வரை 37 மாணவர்​கள் தற்​கொலை செய்​து​கொண்​டுள்​ளனர்.

ஒரு​புறம் தகு​தி, மெரிட் என்று கூறி​விட்​டு, மறு​புறம் மருத்​துவமேல்​படிப்​புக்கு பூஜ்ஜி​யம் எடுத்​தால் போதும் என்று தளர்த்​து​வது ஏன். நீட் தேர்​வுக்​கான பயிற்​சி கட்​ட​ணம் கடந்த 2016-ல்ரூ.18,000 ஆக இருந்த நிலை​யில், தற்​போது ரூ.2 லட்​சம் முதல் ரூ.3 லட்​சம் வரை உயர்ந்​துள்​ளது.

நீட் தேர்வு மூலம் தனி​யார் பயி்ற்சி மையங்​கள் கோடிக்​கணக்​கில் சம்​பா​திக்​கின்​றன. இது முழுக்க முழுக்க வணி​கமய​மாக்​கல். கல்வி என்​பது ஒரு குறிப்​பிட்ட வர்க்​கத்​துக்கு மட்​டு​மான​தாக இருக்​கக் கூடாது. கிராமம், நகரம் என்ற பாகு​பாடின்றி அனை​வருக்​கும் சமமாக இருக்க வேண்​டும்.

காங்​கிரஸ் கட்சி மற்​றும் ராகுல் காந்​தி​யின் மக்​கள் போராட்​டங்​களை ஊடகங்​கள் பெரிய அளவில் காட்​டு​வது இல்​லை. நீட் தேர்​வுக்கு எதி​ராக தமிழகத்​தில் மாநிலத் தலை​வர் மாணிக்​கம் தாகூர் தலை​மை​யில் காங்​கிரஸ் கட்சி மாபெரும் போராட்​டங்​களை முன்​னெடுக்​கும். மத்​தி​யில் காங்​கிரஸ் ஆட்சி அமைந்​து,ராகுல் காந்தி பிரதம​ரான பிறகு, கல்​வித் துறை​யில் நில​வும் இந்த அநீ​தி​களுக்கு பெரிய முற்​றுப்​புள்​ளி வைக்​கப்​படும்​.இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

மாணிக்கம் தாகூர் தலைமையில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்: அமைச்சர் ராஜேஷ்குமார் தகவல்
பொறியியல் பொதுக் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in