வாகனத்தின் விளக்கை சேதப்படுத்தியதற்காக மன்னிப்பு கடிதத்துடன் ரூ.200 வைத்துச் சென்ற நபரால் நெகிழ்ச்சி

சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் கூடிய பதிவு வைரல்
பைக்கின் லைட்டை தவறுதலாக சேதப்படுத்தியதற்காக மன்னிப்பு கடிதத்துடன்  ரூ.200 வைக்கப்பட்டிருந்தது.

பைக்கின் லைட்டை தவறுதலாக சேதப்படுத்தியதற்காக மன்னிப்பு கடிதத்துடன் ரூ.200 வைக்கப்பட்டிருந்தது.

Updated on
1 min read

சென்னை: ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் நிறுத்​திவைக்​கப்​பட்ட பைக்​கின் லைட்டை தவறு​தலாக சேதப்​படுத்​தி​யதற்​காக சம்​பந்​தப்​பட்ட நபர் மன்னிப்பு கடிதத்​துடன் ரூ.200-ஐ வைத்​துச் சென்ற சம்​பவம் நெகிழ்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனைக்கு ஆயிரக்​கணக்​கானோர் தின​மும் சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர். தமிழகம் மட்​டும் அல்​லாமல் அண்டை மாநில மக்​களும் உள்நோயாளி​யாக​வும், புற நோயாளி​யாக​வும் சிகிச்சை பெறுகின்​றனர்.

இருசக்கர வாக​னங்​களில் வரு​வோர் மருத்​து​வ​மனை வளாகத்​திலேயே அதை நிறுத்​தி​விட்டு செல்​வார்​கள். அப்​படி, சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்க்க வந்த நபர் ஒரு​வர் தனது பைக்கை இரு தினங்​களுக்கு முன்பு அந்த மருத்​து​வ​மனை வளாகத்​தில் நிறுத்​தி​விட்டு மருத்​து​வ​மனை வார்​டுக்கு சென்​றுள்​ளார்.

சிறிது நேரத்​துக்கு பிறகு திரும்பி வந்து பார்த்​த​போது, அவரது பைக்​கின் பின்​புற சிகப்பு நிற லைட் உடைந்​திருந்​தது. இதைக் கண்ட அவர், தனது வாக​னத்தை யார் சேதப்​படுத்​தி​யது என கோபத்​துடன் அங்​கும், இங்​கும் பார்த்​துள்​ளார். திட்​டி​விட்டு பைக்கை எடுக்க முயன்​ற​போது, அதில் மாட்​டி​யிருந்த ஹெல்​மெட்​டில் ஒரு சிறிய காகிதம் சுருட்டி வைக்​கப்​பட்​டிருந்​தது.

அதை திறந்து பார்த்​த​போது அதில், ‘பைக் லைட்டை உடைத்​ததற்கு மன்​னிக்​க​வும்’ என ஆங்​கிலத்​தில் எழுதப்​பட்​டிருந்​தது. மேலும், அதனுடன் 2 நூறு ரூபாய் நோட்​டு​கள் வைக்​கப்​பட்டு இருந்​தது. லைட்டை சரி செய்து கொள்​வதற்​காக இந்த 200 ரூபாய் வைக்​கப்​பட்​டிருந்​தது.

இதைக் கண்டு அந்த நபர் நெகிழ்ச்சி அடைந்​தார். மேலும் இதை புகைப்​படம் எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்​டார். ``லைட்டை சேதப்​படுத்​திய நபர் எது​வும் தெரி​யாதது​போல் கடந்து சென்​றிருக்​கலாம்.

ஆனால் தவறு நிகழ்ந்​ததற்கு வருந்​தி, மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்​ததோடு, இழப்​பீ​டாக பணத்​தை​யும் வைத்​து​விட்​டுச் சென்​றுள்​ளார். இந்த நல்லகுணம் மனித நேயத்தை உயிர்ப்​பூட்​டு​வ​தாக உள்​ளது'' என சமூக வலை​தளத்​தில், பலரும் பின்​னூட்​டல் மூலம்​ கொண்​டாடி வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>பைக்கின் லைட்டை தவறுதலாக சேதப்படுத்தியதற்காக மன்னிப்பு கடிதத்துடன்  ரூ.200 வைக்கப்பட்டிருந்தது.</p></div>
பருவநிலை மாற்றத்தால் பரவும் ‘மெட்ராஸ் ஐ’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in