மதுரை பாண்டி கோயிலை கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும்: அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை பாண்டி கோயில். (கோப்புப்படம்)

மதுரை பாண்டி கோயில். (கோப்புப்படம்)

Updated on
1 min read

மதுரை: மதுரை பாண்டி கோயிலை முழு​மை​யாக இந்து சமய அறநிலை​யத்​ துறை கட்​டுப்​பாட்​டில் எடுக்கவேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. மதுரை பாண்​டி கோ​யில் பரம்​பரை பூசாரி உரிமை தொடர்​பாக அறநிலை​யத் துறை பிறப்​பித்த பல்​வேறு உத்​தர​வு​களுக்கு எதி​ராக கோயில் பூசா​ரி​கள் வழக்கு தொடர்ந்​தனர்.

இதில் தனி நீதிபதி 2024-ல் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக்​கோரி சீதாலெட்​சுமி, தனம், பாண்​டீஸ்​வரி, ஆர்த்​தி, ஜெகதீஸ்​பாண்​டியன் ஆகி​யோர் உயர் நீதிமன்ற அமர்​வில் மேல்​முறை​யீடு செய்​தனர்.

இதை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ரா​மகிருஷ்ணன் அமர்வு விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வு: மதத்தை செல்​வம் சேர்க்​கும் போர்​வை​யாக கருதக்​கூ​டாது. பண பலனுக்​காக பக்​தியை வளர்க்​க​வும் முடி​யாது.

மதுரை​யின் காவல் தெய்​வ​மாகப் போற்​றப்​படும் பாண்டி முனீஸ்​வரர் கோயில் பூசா​ரி​கள், கடவுளுக்​குச் சேவை செய்​யாமல் தங்​களின் சொந்த ஆதா​யத்​துக்​காக​வும், ஆடம்பர வாழ்​வுக்​காகவும் பக்​தர்​களின் தட்டு காணிக்​கையை​யும், உண்​டியல் வசூலை​யும் பிரிப்​ப​தற்​காக தங்​களுக்​குள் சண்​டை​யி​டு​கின்​ற​னர். இப்​பிரச்​சினை​யால் ஏராள​மான வழக்​கு​கள் தொடரப்​பட்டு மதச்​சூழல் மாசுபடுத்​தப்​பட்​டுள்​ளது.

கோயில் நிர்​வாகத்​தில் முறை​கேடு​கள் நடப்​பதை அதி​காரி​கள் கண்​டறிந்​துள்​ளனர். இந்த கோயி​லில் தட்டு வசூல் ஆண்​டுக்கு ரூ.1 கோடியை தாண்​டு​வ​தாக​வும், உண்​டியல் வசூல் ஆண்​டுக்கு குறைந்​தது ரூ.4 கோடி வரை இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இந்த பணம் கோயில் கணக்​கில் வரவு வைக்​காமல் முறை​கே​டாக பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது. உண்​டியல் வசூல் பூசாரி​யின் தனிப்​பட்ட உரிமை அல்ல.

அது பக்​தர்​களின் நம்​பிக்கை​யால் குவி​யும் பொது​வான வளம். அந்த வளத்தை தங்களின் குடும்ப சொத்தின் வரு​மானம் என்​பது​ போல் பங்கு கேட்டு சண்​டை​யிடுவது வேதனை​யானது.

அர்ச்சகர் வாழ்​வா​தா​ரத்​துக்​காக உண்டியல் வசூலில் ஒரு தொகை வழங்​குவது வாரிசுரிமை அளிக்காது. இந்த வழக்​கில் தனி நீதிப​தி​யின் உத்​தர​வில் தலை​யிட முடி​யாது. இந்த வழக்​கின் மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர்​கள் உட்பட தனி நபர்​கள் யாரும் கோயி​லில் பரம்​பரை பூசா​ரி​யாக உரிமை கோர முடி​யாது.

பரம்​பரை அறங்​காவலர்​களை நீக்​குவது தொடர்பாக அறநிலை​யத் துறை 4 வாரத்தில் முடி​வெடுக்க வேண்​டும். கோயில் நிர்​வாகத்தை முழு​மை​யாக அறநிலை​யத்​ துறை கட்​டுப்பாட்​டில் எடுக்க வேண்​டும். மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​படு​கின்றன.

<div class="paragraphs"><p>மதுரை பாண்டி கோயில். (கோப்புப்படம்)</p></div>
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு அலுவலர்: ஐகோர்ட் உத்தரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in