மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: சித்திரை வீதிகளில் நுழைய பக்தர்களுக்கு தடை

‘பாஸ்’ பெற்ற 2,000 பேரும் 9,000 விஐபிகளும் மட்டுமே அனுமதி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நடைபெற்ற யாகசாலை பூஜை .

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நடைபெற்ற யாகசாலை பூஜை .

Updated on
1 min read

மதுரை: மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு விழா நடை​பெறும் செப். 17-ம் தேதி சித்​திரை வீதி​களில் பக்​தர்​கள் நின்று விழாவைப் பார்க்க மாநகர் காவல்​துறை தடை விதித்​துள்​ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குட​முழுக்கு விழா செப்​.17-ம் தேதி நடைபெறுகிறது. விழா​வில் பங்​கேற்க ‘பாஸ்’ பெற்ற 2 ஆயிரம் பக்​தர்​கள் 9 ஆயிரம் விஐபிக்கள் உள்பட மொத்​தம் 11 ஆயிரம் பேரை மட்​டும் விழாவுக்கு கோயிலுக்​குள் அனு​ம​திக்க முடி​வெடுத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.

குட​முழுக்கு விழா காலை 7.40 முதல் 8.10 மணிக்​குள் நடக்​கிறது. அதற்கு முன்​பே, விழா​வில் பங்​கேற்க ‘பாஸ்’ பெற்​றவர்​கள் மட்​டும் சித்​திரை வீதி​கள் வழி​யாக கோயிலுக்​குள் அனு​ம​திக்​கப்​படு​கின்​ற​னர். ‘பாஸ்’ பெறாத மற்ற பக்​தர்​கள், சித்​திரை வீதி​களில் நடமாட கோயில் நிர்​வாக அறி​வுறுத்​தலின்​பேரில் மாநகர் காவல்​துறை தடை விதித்​துள்​ளது.

குட​முழுக்கு விழா​வில் பங்​கேற்க ஆன்​லைனில் விண்ணப்​பிக்க கோயில் நிர்​வாகம் முறை​யாக அறிவிக்கவில்லை. ‘பாஸ்’ விண்​ணப்​பம் பெறும் ஆன்லைன் ‘லிங்க்’ நேற்று முன்​தினம் இரவு மட்​டுமே செயல்​பாட்​டில் இருந்​தது. நேற்று காலை முதல் செயல்​ப​டாத​தால், பக்​தர்​கள் விண்​ணப்​பிக்க முடிய​வில்​லை. ஆன்​லைனில் விண்ணப்பித்த 14 ஆயிரம் பேரில் குலுக்​கல் முறை​யில் வெறும் 2 ஆயிரம் பேருக்கு மட்​டுமே‘பாஸ்’ வழங்​கப்​படு​கிறது.

மற்ற அனை​வ​ரும் அரசி​யல் கட்​சி​யினர், உபய​தா​ரர்​கள், விஐபிகள், அதி​காரி​கள் மற்​றும் அவர்​களின் குடும்​பத்​தினர் மட்​டுமே விஐபிக்​கள் ‘பாஸ்​’களு​டன் கோயிலுக்​குள் செல்​கி​றார்​கள். குட​முழுக்கு விழா நேரத்​தில் கோபுரத்​தில் இருந்து நான்கு திசைகளி​லும் ‘ட்​ரோன்’ மூலம் தீர்த்​தம் தெளிக்​கப்​படும். இதற்காக ‘பாஸ்’ இல்​லாத பக்​தர்​கள் சித்​திரை வீதி​களில் திரள்​வர். ஆனால், தற்​போது அதற்​கும் காவல்​துறை தடை விதித்​துள்​ள​தால் பக்​தர்​கள் ஏமாற்​றம் அடைந்​துள்​ளனர்.

கோயில் நிர்​வாகத் தரப்​பில் விசா​ரித்​த​போது, “குட​முழுக்​கைத் தரிசிக்க கோயில் கோபுரத்​தின் மேல் தளத்​தில் அனு​ம​திக்​கப்​படு​கிறவர்​கள், விழா முடிந்து வெளியே சென்ற பிறகு, நிலை​மை​யைப் பொருத்து மற்ற பக்​தர்​கள் காவல்​துறை​யால் சித்​திரை வீதி​களில் அனு​ம​திக்​கப்​படு​வர்" என்​ற​னர்.

கோயில் முடிவே நடை​முறை: மாநகர் காவல்​துறை உயர் அதி​காரி ஒரு​வர் கூறிய​தாவது: பாஸ் பெறாத பக்​தர்​கள் குட​முழுக்கு விழா நடக்​கும் நேரங்​களில் கோயிலுக்​குள் ஆடி வீதி பகு​தி​யிலும், கோயிலுக்கு வெளி​யிலுள்ள சித்​திரை வீதி​களி​லும் அனு​ம​திக்​கப்பட மாட்​டார்​கள். இதற்​குப் பதிலாக ஆவணி மூல வீதி​களில் அனு​ம​திக்க ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. கோயில் நிர்​வாகத்​தின் முடிவையே நாங்​கள் நடை​முறைப்​படுத்​துகி​றோம். இவ்​வாறு தெரிவித்​தார்.

<div class="paragraphs"><p>மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி நேற்று நடைபெற்ற யாகசாலை பூஜை .</p></div>
“தேசிய அளவில் வளர்ந்த விசிகவை பார்த்து சிலருக்கு பொறாமை” - திருமாவளவன் வருத்தம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in