தொழுநோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,500-லிருந்து 2,500-ஆக அதிகரிப்பு

மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல்
தொழுநோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,500-லிருந்து 2,500-ஆக அதிகரிப்பு
Updated on
1 min read

சிவகங்கை: தமிழகத்​தில் தொழுநோ​யாளி​களின் எண்​ணிக்கை 1,500-ல் இருந்து 2,500 ஆக அதி​கரித்த நிலை​யில், அவற்றை கட்​டுப்​படுத்​து​வதற்​குப் பதிலாக அந் நோய்க்கு சிகிச்சை அளிக்​கும் மேற்​பார்​வை​யாளர் பணி​யிடங்​களை நிரப்​பாத​தால் சிக்​கல் எழுந்​துள்​ள​தாக சுகா​தார ஆய்​வாளர்​கள் புகார் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் வட்​டார அளவில் தொழுநோய் ஒழிப்​புப் பணி​களை மருத்​து​வ​மில்லா மேற்​பார்​வை​யாளர்​கள் மேற்​கொண்டு வரு​கின்​றனர். இதனால் தொழுநோய் பரவல் குறைந்​தது. மேலும் சுகா​தார ஆய்​வாளர்​களுக்​குப் பதவி உயர்வு மூலம் மருத்​து​வ​மில்லா மேற்​பார்​வை​யாளர் பணி​யிடங்​கள் நிரப்​பப்​பட்டு வந்​தன. காலப்​போக்​கில் அப்​பணி​யிடங்​களை நிரப்​பாமல் விட்​டனர். இதனால், தற்​போது மாநிலம் முழு​வதும் 408 பணி​யிடங்​களில் 210 இடங்​கள் காலி​யாக உள்​ளன.

இந்​நிலை​யில் கடந்த 5 ஆண்​டு​களாக தொழுநோ​யாளி​கள் எண்​ணிக்கை சத்​தமில்​லாமல் அதி​கரிக்​கத் தொடங்கி உள்​ள​தாக புகார் எழுந்​துள்​ளது. கடந்த 2020-21-ம் ஆண்டு 1,500 ஆக இருந்த தொழுநோ​யாளி​கள் எண்​ணிக்கை தற்​போது 2,500 ஆக அதி​கரித்​துள்​ளது. இதுகுறித்து அச்​சங்​கத்​தின் மாநிலப் பொதுச் செய​லா​ளர் ப.கு​மார் கூறுகை​யில், தொழுநோய் பாதிப்பு 25 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. இதில் மற்​றவர்​களுக்கு பரவக் கூடிய தொழுநோ​யும் உள்​ளது.

இச்​சூழலில் இந்​நோயை வட்​டார அளவில் கண்​டறிந்து சிகிச்சை அளிக்​கும் மருத்​து​வ​மில்லா மேற்​பார்​வை​யாளர் காலிப் பணி​யிடங்​களை நிரப்ப தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தோம். ஆனால், தொழுநோய் ஒழிப்​பில் தீவிரம் காட்​டா​மல்,தற்​போது மருத்​து​வ​மில்லா மேற்​பார்​வை​யாளர் பணி​யிடங்​களையே ஒழித்து வரு​கின்​றனர். ஏற்​கெனவே கூடு​தலாக பணிப் பளு​வில் இருக்​கும் வட்​டார சுகா​தார மேற்​பார்​வை​யாளர், சுகா​தார ஆய்​வாளர்​களையே அப்​பணி​களை​யும் கவனிக்க பொது சுகா​தா​ரத்​துறை நெருக்​கடி கொடுத்து வரு​கிறது.

தொழுநோய் ஒழிப்புப் பணி​யில் தொய்​வு​தான் ஏற்​படும். சுகா​தார ஆய்​வாளர்​களுக்​கான பதவி உயர்​வும் பாதிக்​கப்​படும். இதை கண்​டித்து ஜூலை 16 முதல் பணி புறக்​கணிப்​புப் போராட்​டம் நடத்த உள்​ளோம். இவ்​​வாறு அவர் தெரிவித்​​தார்​.

தொழுநோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தில் 1,500-லிருந்து 2,500-ஆக அதிகரிப்பு
“ஒரு மணி நேரத்தில் ஒப்பந்த மீறல்” - ஈரான் மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in