

மதுரையில் நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய ‘நீதிபதி பார்வைகள்: வாழ்க்கை, சட்டம் மற்றும் இலக்கியம்’ என்ற நூலை உயர் நீதிமன்ற நீதிபதி
எல்.விக்டோரியா கௌரி வெளியிட, பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா பெற்றுக்கொண்டார். உடன், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை: சட்டமும், சமூகமும் நெருங்கிய தொடர்புடையவை. சட்டத்திலிருந்து சமூகம் பிரிந்து செயல்படவோ, சமூகத்திலிருந்து சட்டத்தை புறந்தள்ளவோ முடியாது என்று உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆன்ந்த் வெங்கடேஷ் கூறினார்.
இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பில், உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் எழுதிய ‘நீதிபதியின் பார்வைகள்: வாழ்க்கை, சட்டம் மற்றும் இலக்கியம்’ எனும் நூல் வெளியீட்டு விழா மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமை வகித்தார். இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் கு.சாமிதுரை வரவேற்றார்.
உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கௌரி நூலை வெளியிட, சாலமன் பாப்பையா, முன்னாள் அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, எம்எம்பிஏ தலைவர் ஐசக் மோகன்லால் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் நீதிபதி எல்.விக்டோரியா கௌரி பேசும்போது, “இலக்கியத்தில் சிறந்த நகரம்என்ற பெயர் சங்கத் தமிழ் வளர்த்த மதுரைக்குத்தான் பொருந்தும்.
இந்த நூலில், சட்டச் சிக்கல்கள், இலக்கியம், உளவியல், ஆன்மிகம், இசை உள்ளிட்டபல்வேறு தலைப்புகளில்50 கட்டுரைகளை நீதிபதி தொகுத்துள்ளார். நுண்ணிய மவுனமே இசையாக அமையும் என்று மேல் நாட்டு இசை அறிஞர்கள் குறிப்பிடுவதுபோல, வாழ்க்கை இசையோடு இயைந்ததுதான். நாம் இசை சூழ்ந்த வாழ்க்கையைவாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: நீதிபதிகளும் சாதாரண மனிதர்கள்தான். அவர்கள் சமுதாயத்தில் பார்த்ததை, படித்ததை வெளிப்படுத்த ஒரு வெளி தேவை. அந்த வெளிதான் இந்தப் புத்தகம். நீதிபதியின் இறுமாப்பு, பதவி, அதிகாரம் இப்புத்தகத்தில் எட்டிப் பார்க்கவில்லை. சட்டமும், சமூகமும் மிக நெருங்கிய தொடர்புைடயவை.
சட்டத்திலிருந்து சமூகம் பிரிந்து செயல்படவோ, சமூகத்திலிருந்து சட்டத்தைப் புறந்தள்ளவோ முடியாது. இந்த கட்டுரையில் இலக்கிய நயத்தை தேடாதீர்கள். ஆனால், இதில் ஒரு மனிதனின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது. எழுத்து எனக்குள் ஏற்படுத்திய ரசவாத மாற்றம்தான் இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று தெரியாது. கரித் துண்டில் ஏற்படும் மாற்றம்தான் வைரமாகிறது. இவ்வாறு அவர் பேசினார். நியூ செஞ்சுரி புத்தக நிறுவன விற்பனை மேலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.