ஓதனட்டியில் வீடு கட்டும் பணியின்போது மண் சரிவு: வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் ஓதனட்டி கிராமத்தில் கட்டுமானப் பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் ராணுவத்தினர்.

நீலகிரி மாவட்டம் ஓதனட்டி கிராமத்தில் கட்டுமானப் பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் ராணுவத்தினர்.

Updated on
1 min read

குன்னூர்: ஓதனட்டி கிராமத்​தில் கட்​டு​மானப் பணி​களுக்​காக குழி தோண்​டிய​போது 40 அடி உயரத்​திலிருந்து மண் சரிந்து விழுந்​த​தில் வடமாநிலத் தொழிலா​ளர் 3 பேர் மண்​ணுக்​குள் புதைந்து பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

நீல​கிரி மாவட்​டம் குன்​னூர் ஜெகதளா பேரூ​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில், கடந்த சில மாதங்​களாக விதி​களை மீறி அதிக அளவில் கட்​டிடங்​கள் கட்​டப்​பட்டு வரு​கின்​றன. இந்​நிலை​யில், முத்​துகிருஷ்ணன் என்​பவரின் இடத்​தில் வீடு கட்​டு​வதற்​காக அஸ்​தி​வாரம் தோண்​டும் பணி​கள் கடந்த சில நாட்​களாக நடந்து வந்​தன. அவரது நிலம் பள்​ளத்​தில் இருப்​ப​தால், 40 அடிக்கு தடுப்​புச் சுவர் கட்ட மண் தோண்​டும் பணி நடந்து வந்​துள்​ளது.

மேற்கு வங்க மாநிலம் முசி​ரா​பாத் பகு​தி​யைச் சேர்ந்த தொழிலா​ளர்​கள் அதே இடத்​தில் தங்கி பணி​யாற்றி வந்​தனர். இந்​நிலை​யில், நேற்று மதி​யம் நசீர் உசேன்​(24), அப்​துல் ரகு​மான்​(24), உஸ்​மான்​(40) உட்பட 5 தொழிலா​ளர்​கள் பணி​களை மேற்​கொண்​டனர். திடீரென 40 அடி உயரத்​திலிருந்து மண் சரிந்​தது. இரு​வர் அங்​கிருந்து ஓடி தப்​பிய நிலை​யில், நசீர் உசேன்​(24), அப்​துல் ரகு​மான்​(24), உஸ்​மான்​(40) ஆகியோர் மண்​ணுக்​குள் புதைந்​தனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்​புத் துறை​யினர் மற்​றும் ராணுவத்​தினர் மீட்​புப் பணி​களில் ஈடு​பட்​டனர். ஒரு​வரை மீட்ட தீயணைப்பு வீரர்​கள், சிகிச்​சைக்​காக குன்​னூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​த​னார். ஆனால், அவர் வழி​யிலேயே உயி​ரிழந்​தார்.

மற்ற இரு​வரை மீட்​கும் பணி​களை மேற்​கொள்​வ​தில் சிரமம் ஏற்​பட்​ட​தால், பொக்​லைன் இயந்​திரம் வரவழைக்​கப்​பட்​டு, மண் அகற்​றும் பணி நடை​பெற்​றது. பின்​னர் இரு​வரது உடல்​களும் மீட்​கப்​பட்​டு, பிரேதப் பரிசோதனைக்​காக குன்​னூர் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பிவைக்​கப்​பட்​டன.

முன்​ன​தாக, சார் ஆட்​சி​யர் சங்​கீ​தா, காவல் துணை கண்​காணிப்​பாளர் ரவி, முன்​னாள் எம்​எல்ஏ சாந்தி ராமு உள்​ளிட்​டோர் உடல்​கள் மீட்​கும் வரை அங்​கிருந்​து, மீட்பு நடவடிக்​கைகளை துரிதப்​படுத்​தினர். இதுகுறித்து போலீ​ஸார் கூறும்​போது, “நில உரிமை​யாளர், பணி ஒப்​பந்​த​தா​ரர் உள்​ளிட்​டோரிடம் விசா​ரணை மேற்​கொள்​ளப்​படும். பணி​களுக்​காக உரிய அனு​மதி பெறப்​பட்​டதா என்​பது குறித்​தும் விசா​ரிக்​கப்​படும்” என்​றனர்.

நீல​கிரி மாவட்​டத்​தில் கட்​டு​மானப் பணி​கள் 33 டிகிரி சரிவுக்கு மேல் மேற்​கொள்​ளக்​கூ​டாது என்று விதி​முறை உள்​ளது. ஆனால், மாவட்​டத்​தின் பல்​வேறு பகு​தி​களில் கட்​டு​மான விதி​களை அப்​பட்​ட​மாக மீறி வரு​வ​தாக சுற்​றுச்​சூழல் ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>நீலகிரி மாவட்டம் ஓதனட்டி கிராமத்தில் கட்டுமானப் பணியின்போது மண்ணில் புதைந்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு துறையினர் மற்றும் ராணுவத்தினர்.</p></div>
தெறிக்கவிட்ட காளைகள்... தீரம் காட்டிய காளையர்கள்! - அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு க்ளிக்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in