“பாமக அங்கம் வகிப்பது கூடுதல் பலம்” - மத்திய இணை அமைச்சர் எல்​.​முருகன் கருத்து

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

Updated on
1 min read

கோவை: தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாமக அங்​கம் வகிப்​பது கூடு​தல் பலம் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கூறி​னார். கோவை விமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: திருப்​பரங்​குன்​றம் தீபம் விவ​காரத்​தில் திமுக அரசின் போலி முகம் வெளிப்​பட்​டு​விட்​டது.

இந்த விவ​காரத்​தில் திமுக அரசும், மாவட்ட நிர்​வாக​மும் முறை​யாகசெயல்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால், இரட்டை நிலைப்​பாடுஎடுத்​தார்​கள். நீதி​மன்​றத் தீர்ப்பைநிறைவேற்​ற​வில்​லை. தற்​போதைய மதுரை அமர்வு தீர்ப்​பு.திமுக அரசுக்கு விடுக்​கப்​பட்ட எச்​சரிக்​கை. இந்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்​டும்.

திருப்​பரங்​குன்​றம் தீபத் தூணில் பக்​தர்​கள் சென்று தீபம் ஏற்​றத் தேவை​யான நடவடிக்​கைகளை அரசு மேற்​கொள்ள வேண்​டும். இல்​லை​யேல் அரசுக்கு மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள். பெரு​மாநல்​லூர் அருகே கோயில் அகற்​று​வதைக் கண்​டித்து போராட்​டத்​தில் ஈடு​பட்ட இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம் தாக்​கப்​பட்​டிருப்​பதை கண்​டிக்​கிறேன்.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில்​தான் பாமக ஏற்​ெக​னவே இடம் பெற்​றுள்​ளது. 2024 மக்​கள​வைத் தேர்​தலை இணைந்தே சந்​தித்​தோம். தற்​போது தேஜ கூட்​ட​ணி​யில் பாமக அங்​கம் வகிப்​பது கூடு​தல் பலத்தை கொடுக்​கும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அசைக்க முடி​யாத சக்தி: பாஜக மூத்த தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜன் கோவைவிமான நிலை​யத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: திமுக அவதூறு செய்து கொண்டு இருந்​த​தால், அமித்ஷா அவதூறு ஷாவாகத்​தான் இருப்​பார். நல்​ல​வர்​களுக்கு அன்​பான ஷாவாக இருப்​பார். மத்​திய அரசு மீது இது​வரை ஊழல் குற்​றச்​சாட்​டு​கள் எது​வும் எழவில்​லை.

இது​போல திமுக இருக்​கிற​தா? தமிழகத்​தில் அதிக ஊழல் செய்த கட்​சி​யாக திமுகஉள்​ளது. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யுடன் சேரும்​போது​தான் விஜய் அசைக்க முடி​யாத சக்​தி​யாக மாறு​வார். இல்​லா​விட்​டால் தேஜகூட்​ட​ணி​யில் உள்ள கட்​சி களுக்கு திமுகவை வீட்​டுக்கு அனுப்ப வேண்​டுமென்ற பொறுப்பு இருக்​கிறது, விஜய்க்​கும் அதே பொறுப்பு இருக்​கிறது.

அதை தனி​யாக சாதிக்க முடி​யு​மா, அணி​யாக சாதிக்க முடி​யுமா என்​பதை விஜய் யோசிக்க வேண்​டும். சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அரசி​யல் எதிரியைத்​தான் எதிர்க்க வேண்​டும். கொள்கை எதிரியை அல்ல.இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.</p></div>
ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in