“பிஹார் முடிவுகள் திமுக கூட்டணியைப் பாதிக்காது!” - கே.வி.தங்கபாலு நேர்காணல்

கே.வி.தங்கபாலு | கோப்புப் படம்

கே.வி.தங்கபாலு | கோப்புப் படம்

Updated on
2 min read

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்திருக்கும் நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் இருக்கும் என்று விவாதங்கள் றெக்கை கட்டுகின்றன. இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தலைவர் கே.வி.தங்கபாலுவிடம் ‘இந்து தமிழ் திசை’க்காக பேசினோம்.

பிஹார் தேர்தல் முடிவுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

தேர்​தல் அறி​விப்​புக்கு முன்​னும் பின்​னு​மாக 1.40 கோடி மகளிருக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் நிதி​யளித்​தது தேர்​தலில் பெரும் தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இது அரசி​யல் சட்ட நெறி​முறை​களுக்​கும், தேர்​தல் ஆணைய விதி​களுக்​கும் எதி​ரானது. இந்த விவ​காரத்​தில் அரசே நேரடி​யாக ஓட்​டுக்கு லஞ்​சம் கொடுத்​துள்​ளது. வளர்ச்சி திட்​டங்​களுக்கு உலக வங்​கியி​லிருந்து பெறப்​பட்ட கடன் தொகை​யில் ரூ.14 ஆயிரம் கோடி, இத்​திட்​டத்​துக்​காக பயன்​படுத்​தப்பட்​டு உள்​ளது. ஆக, பிஹார் தேர்​தலில் பாஜக கூட்​டணி வெற்​றி​பெற​வில்​லை; வாக்​கு​களை விலைக்கு வாங்கி இருக்​கிறது.

காங்கிரஸூக்கு அதிகமான இடங்களைக் கொடுத்ததும் தோல்விக்குக் காரணம் என்கிறார்களே..?

இது தவறான விமர்​சனம். கடந்த தேர்​தலில் காங்​கிரஸ் 70 இடங்​களில் போட்​டி​யிட்​டது. இம்​முறை கூட்​ட​ணியை வலுப்​படுத்​தும் நோக்​கில் மேலும் பல கட்​சி

களுக்கு கூட்​ட​ணி​யில் இடமளித்​த​தால் 9 தொகு​தி​களை விட்​டுக் கொடுத்​தது காங்​கிரஸ். ஆனால், எங்​களுக்கு ஆதர​வான வாக்​கு​களை எஸ்​ஐஆர் என்ற பெயரில் நீக்​கி​விட்டு குறுக்கு வழி​யில் பாஜக கூட்​டணி வெற்றி பெற்​றுள்​ளது.

பிஹார் முடிவுகளை வைத்து இங்கேயும் காங்கிரஸுக்கு தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் வருமா?

தமி​ழ​கத்​தில் திமுக தலை​மையி​லான எங்​கள் கூட்​டணி வலு​வாக​வும், வளமாக​வும் உள்​ளது. இக்​கூட்​ட​ணி​யில் இருக்​கும் அனை​வ​ரும் கூட்​ட​ணிக்கு பலம் சேர்ப்​பவர்​கள்; கூட்​டணி வெற்​றிக்​காக தொடர்ந்து பாடு​படு​பவர்​கள். பல்​வேறு வெற்​றிகளை தொடர்ந்து பெற்ற கூட்​டணி இது. எனவே, பிஹார் முடிவு​கள் எந்த வகை​யிலும் காங்​கிரஸையோ, திமுக கூட்​ட​ணி​யையோ பாதிக்​காது.

தமிழக காங்கிரஸார், ‘அதிக இடங்கள்... ஆட்சியில் பங்கு’ எனச் சொல்வதை இம்முறை டெல்லி தலைமை காதுகொடுத்துக் கேட்குமா?

முந்தைய தேர்தலை விட கூடுதலான இடங்களைக் கேட்பது என்பது தேர்தலுக்குத் தேர்தல் எதிரொலிக்கும். ஆனால் காங்கிரஸைப் பொறுத்தவரை, கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எங்களின் கருத்துகளை கேட்டாலும் இறுதி முடிவு எடுப்பது என்னவோ அகில இந்திய தலைமை தான். அதேசமயம் அந்த முடிவானது மாநில காங்கிரஸூக்கு ஏற்ற முடிவாகவும் இருக்கும்.

ஒருவேளை, இம்முறை கூட்டணியை வலுப்படுத்துவதற்காக காங்கிரஸுக்கான கோட்டாவை திமுக குறைத்தால்..?

நாங்கள் இப்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான புரிதலுடன் கூடிய கூட்டணியில் இருக்கிறோம். அதனால் அப்படி ஒரு சூழல் நிச்சயம் வராது.

தமிழ்நாடு காங்கிரஸில் பெண்களுக்கு உரிய மரியாதை தரப்படுவதில்லை என மாநில மகளிர் காங்கிரஸ் தலைவி ஹசீனா சையத் வருத்தப்படுகிறாரே..?

இதற்கு முன்பு தமிழக காங்கிரஸில் மகளிருக்கு ஒரு எம்பி மட்டுமே இருந்தார். இப்போது 2 பேர் இருக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளிலும், சட்டப் பேரவையிலும் மகளிர் காங்கிரஸார் அங்கம் வகிக்கிறார்கள். கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு உரிய மரியாதையையும், பொறுப்புகளையும் காங்கிரஸ் தலைமை வழங்கி வருகிறது; தொடர்ந்து வழங்கும்.

நீங்கள் மாநில தலைவராக இருந்த காலத்தில் இருந்தது போல் இப்போதும் கட்சியில் கோஷ்டிகள் இருக்கிறதா?

எல்லா காலத்​தி​லும் கோஷ்டி அரசி​யல் இருக்​கும். நாங்​கள் நல்ல ஆரோக்​கிய​மான அரசி​யலைச் செய்​கி​றோம். அதனால் தான் எதிர் கருத்​துகளை வரவேற்​கி​றோம். கட்​சி​யின் வளர்ச்​சிக்​காக சொல்​லப்​படும் அனைத்து கருத்​துகளை​யும் ஏற்று செயல்​படு​கிறது காங்​கிரஸ். ஆகவே, இதை கோஷ்டி அரசி​ய​லாக பார்க்​கக்​கூ​டாது.

தவெக-வுக்கு கூட்டணி தூது அனுப்பியதாமே காங்கிரஸ்..?

காங்கிரஸ் வெளிப்படையான கட்சி. அது மறைமுகமாக எதுவும் செய்யாது. தமிழகத்தில் இப்போது உள்ள கூட்டணியே சிறப்பாக செயல்படுகிறது. கூட்டணி விஷயத்தில் அகில இந்திய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது.

நான்கரை ஆண்டு திமுக ஆட்சியின் நிறை, குறைகளைச் சொல்ல முடியுமா?

நிறைகள் நிறைய இருக்கின்றன. பொருளாதார ரீதியில் அகில இந்திய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தின் பெரும்பாலான துறைகள் அகில இந்திய அளவில் முதன்மை பெற்றுள்ளதாக மத்திய அரசு சான்றளித்துள்ளது. குறை குறைவாகவே இருக்கிறது. இன்னும் ஆட்சிக்கு காலம் இருப்பதால் எஞ்சிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதியளித்திருக்கிறார்.

அரசுப் பணியிடங்களை நிரப்பாதது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு இதெல்லாம் இம்முறை உங்களுக்கு சவாலாக இருக்காதா?

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் அவகாசம் இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத திட்டங்கள் பலவற்றை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அவை எல்லாம் இந்தத் தேர்தலிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in