

ஊட்டி: கோடநாடு வழக்கு விசாரணை ஜூன் 19-க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017- ஏப்ரலில் காவலாளி கொலை செய்யப்பட்டு, பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உதகை நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், செல்போன் உரையாடல் மற்றும்தகவல் பரிமாற்றங்கள் குறித்து குஜராத்தில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இருந்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் இன்னும் கிடைக்காததால், விசாரணைக்கு கால அவகாசம் கோரப்பட்டது.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் அவகாசம் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி எம்.செந்தில்குமார் வழக்கு விசாரணையை ஜூன் 19-க்குதள்ளிவைத்தார்.