சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மருத்துவ பரிசோதனை

சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மருத்துவ பரிசோதனை
Updated on
1 min read

சென்னை: கேரள முதல்​வர் பின​ராயி விஜயன், சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் நேற்று மருத்​துவ பரிசோதனை​களை மேற்​கொண்​டார்.

கேரள மாநில முதல்​வர் பின​ராயி விஜயன் (80). வழக்க​மாக ஆண்​டு​தோறும் முழு உடல் பரிசோதனை உட்பட மருத்​துவ பரிசோதனை​களை மேற்கொண்டு வரு​கிறார். இதன் தொடர்ச்சியாக நேற்று காலை சென்னை அப்போலோ மருத்​து வமனை​யில்பின​ராயி விஜயன் அனு​ம​திக்கப்​பட்​டார்.

அவருக்கு மருத்​து​வர்​கள் குழு​வினர், ‘ரத்த பரிசோதனை​ கள், இசிஜி’ உள்ளிட்ட பரிசோதனைகளை செய்தனர். ஒரு சில சிகிச்​சை​யும் அளிக்​கப்​பட்டது. பரிசோதனை​கள் முடிந்த நிலை​யில், மாலையில் அவர் டிஸ்​சார்​ஜ் செய்​யப்​பட்​டார்​.

தமிழ் மகன் உசேனுக்கு சிகிச்சை: இதேபோல் அ​தி​முக அவைத்​தலை​வர் தமிழ் மகன் உசேனுக்கு உடல்​நலக் குறைவு ஏற்​பட்​ட​தால், அவரும் அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கிறார்.

பித்​தப்பை கல் பிரச்​சினை​யால் அவதிப்​பட்டு வந்த அவர், சமீபத்​தில் நாகர்​கோ​விலில் உள்ள தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்​றார். பின்​னர், மருத்​து​வர்​களின் ஆலோ​சனைப்படி ஓய்​வில் இருந்து வந்தார்.

இந்​நிலை​யில், கடந்த 16-ம் தேதி வீட்​டில் திடீரென்று மயங்கி விழுந்த அவரை உடனடி​யாக கீழ்ப்​பாக்​கத்​தில் உள்ள அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் அனு​ம​தித்​தனர். அங்கு பரிசோதனை செய்​த​தில், பித்​தப்பை கல், குறைந்த ரத்த அழுத்​தம் உள்​ளிட்ட பிரச்​சினை​கள் இருப்​பது தெரிய​வந்​தது. மருத்​து​வர்​கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வரு​கின்​றனர்.

இதற்​கிடையே, மருத்​து​வ​மனை மருத்​துவ கண்​காணிப்​பாளர் மருத்​து​வர் சிவ பிர​சாத் ராவ் போபா நேற்று வெளி​யிட்ட அறிவிப்​பில், “தமிழ்மகன் உசேன் உடல்​நிலை​யில் முன்​னேற்​றம் ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து, அவர் சாதாரண வார்​டுக்கு மாற்​றப்​பட்​டுள்​ளார்” என கூறியுள்​ளார்.

சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மருத்துவ பரிசோதனை
திருப்பரங்குன்றத்தில் சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு தடுப்புகள் அகற்றப்பட்டு மலைக்கு போகும் பாதை திறப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in