கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி

முதல்வர் விஜய் வழங்கினார்
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி
Updated on
1 min read

கரூர்: கரூரில் தவெக பிரச்​சார கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களைச் சேர்ந்த 31 பேருக்கு முதல்​வர் விஜய் நேற்று கருணை அடிப்​படை​யில் அரசு வேலைக்​கான பணி நியமன ஆணை​களை வழங்​கி​னார். மேலும், ஒரு​வருக்கு கருணைத் தொகை​யாக ரூ.10 லட்​சம் அளித்​தார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கடந்​தாண்டு செப்​.27-ம் தேதி நடை​பெற்ற தவெக பிரச்​சா​ரத்​தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். உயி​ரிழந்​தவர்​கள் குடும்​பத்​தினருக்கு தவெக சார்​பில் ரூ.20 லட்​சம் நிவாரணம் வழங்​கப்​பட்​டது. அவர்​களை சென்னை மாமல்​லபுரம் அழைத்து விஜய் ஆறு​தல் கூறி​னார்.

ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றதைத் தொடர்ந்​து, கரூர் சம்​பவத்​தில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்​யப்​பட்​டது. இதற்​காக அவர்​களின் கல்​வித்​தகுதி உள்​ளிட்ட விவரங்​கள் சேகரிக்​கப்​பட்​டன.

இந்​நிலை​யில், கரூர் ஆட்​சி​யர் அலு​வலக கூட்​டரங்​கில், கூட்ட நெரிசலில் உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு பணி ஆணை வழங்​கும் நிகழ்ச்சி ஆட்​சி​யர் சி.​முத்​துக்​குமரன் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில், பாதிக்​கப்​பட்ட 31 குடும்​பங்​களைச் சேர்ந்​தவர்​களுக்கு கல்​வித் தகுதி அடிப்​படை​யில் பல்​வேறு துறை​களில் இளநிலை உதவி​யாளர், அலு​வலக உதவி​யாளர் உள்​ளிட்ட பணி​களுக்​கான ஆணை​களை​யும், ஒரு​வருக்கு ரூ.10 லட்​சத்​துக்​கான கருணைத் தொகை​யை​யும் முதல்​வர் விஜய் வழங்​கி​னார். அப்​போது, பணி ஆணையை பெற்ற பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினர் சிலர் கண் கலங்​கினர். அப்​போது, முதல்​வரும் கண் கலங்​கி, அவர்​களுக்கு ஆறு​தல் தெரி​வித்​தார்.

தொடர்ந்து அங்​கிருந்​த​படி, மணவாசி​யில் தனி​யார் காலணி தொழிற்​சாலைக்​கான அடிக்​கல்லை முதல்​வர் விஜய் நாட்​டி​னார். நிகழ்ச்​சி​யில், அமைச்​சர்​கள் ஆதவ் அர்​ஜு​னா, அருண் ராஜ், செங்​கோட்​டையன், கீர்த்​த​னா, விஜயலட்​சுமி மற்​றும் ஜோதி​மணி எம்​.பி. கிருஷ்ண​ராயபுரம் எம்​எல்ஏ எம்​.சத்யா உள்​ளிட்​டோர்​ கலந்​து கொண்​டனர்​.

கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in