அறிவியல் சொல்ல முடியாத அற்புதங்களை 2,000 ஆண்டுக்கு முன்பே அருளிய சித்தர்கள்: உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் பெருமிதம்

‘இந்து தமிழ் திசை' பதிப்பக வெளியீட்டில் சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானெக் ஷா எழுதிய ‘சித்தமிருக்க பயமேன்’ என்ற நூலை, சென்னையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பெற்றுக்கொண்டார். உடன், நீதிபதி சி.சரவணன், நூலாசிரியர் ஒய்.ஆர்.மானெக் ஷா. படம்: ம.பிரபு

‘இந்து தமிழ் திசை' பதிப்பக வெளியீட்டில் சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானெக் ஷா எழுதிய ‘சித்தமிருக்க பயமேன்’ என்ற நூலை, சென்னையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பெற்றுக்கொண்டார். உடன், நீதிபதி சி.சரவணன், நூலாசிரியர் ஒய்.ஆர்.மானெக் ஷா. படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: இன்​றைய அறி​வியல், கணினி யுகம் அறு​தி​யிட்​டுச் சொல்ல முடி​யாத அற்​புதங்​களை 2 ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன்பே நமக்கு சித்த மருத்​து​வ​மாக சித்​தர்​கள் அருளி​விட்டு சென்​றுள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் பெரு​மிதம் தெரி​வித்​தார்.

‘இந்து தமிழ் திசை’ பதிப்பக வெளி​யீட்​டில் சித்த மருத்​து​வர் ஒய்​.ஆர்​.​மானெக் ஷா எழு​திய ‘சித்​தமிருக்க பயமேன்’ என்ற ஆரோக்​கிய வாழ்​வுக்கு வழி​காட்​டும் சித்த மருத்​துவ நூல் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடந்​தது. விழா​வில் பேராசிரியர் ஏ.முகமது அப்​துல்​காதர் வரவேற்​றார். நூலை உச்ச நீதி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் வெளி​யிட, அந்த நூலை சென்னை உயர் நீதி​மன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா பெற்​றுக்​கொண்​டார். நீதிபதி சி.சர​வணன் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார்.

இந்​நிகழ்​வில் நீதிபதி ஆர்​.ம​காதேவன் பேசி​ய​தாவது: உலகில் அறிவு சார்ந்த பல்​வேறு தரவு​களின் அடிப்​படை​யில் தமிழ் மண்​தான், இயற்​கையோடு இயைந்த வாழ்வை பதிவு செய்து இருக்​கிறது. இன்​றைய நவீன அறி​வியல், கணினி யுகம் அறு​தி​யிட்​டுச் சொல்ல முடி​யாத பல அற்​புதங்​களை 2 ஆயிரம் ஆண்​டு​களுக்கு முன்பே சித்​தர்​கள் நமக்கு சித்த மருத்​து​வ​மாக அருளி​விட்​டுச் சென்​றுள்​ளனர். உடம்​பை​யும், உள்​ளத்​தை​யும் வைத்து திரு​மூலர் பாடிய பாடல்​கள்​தான் தமிழ் மருத்​து​வத்​தின் அடி​நாதம்.

மக்​களோடு, மக்​களாக வாழ்ந்த அகத்​தி​யர், போகர் போன்ற பல சித்​தர்​கள் ஓலைச்​சுவடிகளி​லும், கல்​லிலும் எழுதி வைத்​துச்​சென்ற குறிப்​பு​கள் உலகத்​தவர்​களை வியக்க வைத்​துள்​ளது. பார்​கின்​சன் நோய்க்கு தூது​வளை​யின் அடிப்​பகுதி வேரை வெயில் படா​மல் உலர்த்தி பசுநெய் விட்டு குலைத்து சிறு, சிறு உருண்​டைகளாக 48 நாள் சாப்​பிட்​டால் பார்க்​கின்​சன் நோய் அணு​காது என 1,500 ஆண்​டு​களுக்கு முந்​தைய சித்த மருத்​துவ குறிப்பு நம்​மிடம் உள்​ளது. உன்​னத​மான வாழ்க்​கையை அறச்​சிந்​தனை​யின் வாயி​லாக வாழ வேண்​டிய விதத்​தில் வாழ்ந்​தால் என்​றும் இளமை​யாக வாழலாம். இவ்​வாறு பேசி​னார்.

உயர் நீதி​மன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்​திரா பேசும்​போது, “சித்த மருத்​து​வத்​தின் புகழை அடுத்த தலை​முறைக்கு கொண்டு செல்ல வேண்​டியது காலத்​தின் கட்​டா​யம். சித்த மருத்​து​வம் நமது வாழ்​வியல் நெறி. நீண்ட கால பிரச்​சினை​களுக்கு சித்த மருத்​து​வம் தான் நிரந்தர தீர்​வு. பாமர மக்​களும் அறிந்து கொள்​ளும் வண்​ணம் சித்த மருத்​து​வம் குறி்த்து இது​போன்ற விழிப்​புணர்வு நூல்​கள் தீர்​வாக அமை​யும், என்​றார்.

இறு​தி​யாக நூலாசிரியர் டாக்​டர் ஒய்​.ஆர்​.​மானெக் ஷா ஏற்​புரை நிகழ்த்​தி​னார். சென்னை உயர் நீதி​மன்ற கூடு​தல் தலைமை வழக்​கறிஞர் ஜெ.ர​வீந்​திரன், சித்த மருத்​துவ மாணவ, மாண​வியர் பங்​கேற்​றனர். விழா​வில் கற்​பகவள்ளி சிவக்​கு​மார் தொகுத்து வழங்க, தூத்​துக்​குடி சகாய​ராஜ் நன்றி கூறி​னார்.

<div class="paragraphs"><p>‘இந்து தமிழ் திசை' பதிப்பக வெளியீட்டில் சித்த மருத்துவர் ஒய்.ஆர்.மானெக் ஷா எழுதிய ‘சித்தமிருக்க பயமேன்’ என்ற நூலை, சென்னையில் நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் வெளியிட, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா பெற்றுக்கொண்டார். உடன், நீதிபதி சி.சரவணன், நூலாசிரியர் ஒய்.ஆர்.மானெக் ஷா. படம்: ம.பிரபு</p></div>
யார் இந்த சீனிவாசன்? - மலையாள சினிமாவின் பன்முக ஆளுமை!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in