“புத்தகங்கள் வாழ்க்கையை உன்னதமாக்கும்” - நீதிபதி ஆர்.மகாதேவன் நெகிழ்ச்சி

49-வது சென்னை புத்தக காட்சி நிறைவு விழா
சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவின்போது பதிப்பகங்களில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பணியாளர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கினார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வயிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். | படம்:எஸ். சத்தியசீலன் |

சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவின்போது பதிப்பகங்களில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பணியாளர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கினார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வயிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். | படம்:எஸ். சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: புத்தகங்கள் வாழ்க்​கையை உன்​னத​மாக்​கும், தொடர் வாசிப்பு அறிவை அகலப்​படுத்​தும் என்று சென்னை புத்தக காட்சி நிறைவு​விழா​வில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் கூறி​னார்.

தென்​னிந்​திய புத்தக விற்​பனை​யாளர் மற்​றும் பதிப்​பாளர் சங்​கம் (பபாசி) சார்​பில் 49-வது சென்னை புத்தக காட்சி ஜனவரி 8-ம் தேதி தொடங்கி நேற்​றுடன் முடிவடைந்​தது. சுமார் ஆயிரம் அரங்​கு​கள் இடம்​பெற்ற இந்த புத்தக காட்​சியை 13 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் பார்​வை​யிட்​டுள்​ளனர்.

புத்தக காட்சி நிறைவு ​விழா நேற்று மாலை நடை​பெற்​றது. இதில் உச்​ச நீ​தி​மன்ற நீதிபதி ஆர்​.ம​காதேவன் சிறப்பு விருந்​தின​ராக கலந்​து​கொண்டு பதிப்​புத் ​துறை​யில் 25 ஆண்​டு​கள் பணிநிறைவு செய்த பணி​யாளர்​களுக்கு விருது வழங்கி கவுர​வித்​தார்.

அவர் பேசியதாவது: மொழி, கலாச்​சாரம், சிந்​தனை இவை அனைத்​தும் நமது முன்​னோர்​கள் அடுத்த தலை​முறைக்கு கொண்​டு​வந்து சேர்த்​தவை. தமிழ் மொழி 3 ஆயிரம் ஆண்டு பழமையான மூத்த மொழி. ஞானத்தை வாரி வழங்​கிய மொழி. பழந்​தமிழ் படைப்​பு​கள் தமிழின் உன்​னதத்தை எடுத்​துக்​காட்​டு​கின்​றன.

தமிழில் கோடிக்​கணக்​கான படைப்​பு​கள் உள்​ளன. அவற்​றில் முதன்​மை​யானது திருக்​குறள், அடுத்​தது கம்​ப​ரா​மாயணம் என்​கிறார் நாமக்​கல் கவிஞர் ராமலிங்​கம் பிள்​ளை. தொல்​காப்​பி​யம் வெறும் தமிழ் இலக்கண நூல் அல்ல, அது தமிழ் மண்​ணின் வாழ்வை எடுத்​துரைக்​கும் நூல். தமிழ் ஏன் சிறந்த மொழி, அதை ஏன் உயர்த்​திப் பிடிக்க வேண்​டும் என்​ப​தற்​கும் தமிழில் இலக்​கி​யங்​களில் காரணங்​கள் சொல்​லப்​பட்​டுள்​ளன.

அதில் அறி​வின் உச்​சத்தை காணலாம். இன்​றைய இயந்​திர உலகில், தமிழ்ச்​ சமூகம் தமிழ் மொழியையை​யும், தமிழ்க்​ கலாச்​சா​ரத்தை​யும் அடுத்த தலை​முறைக்கு கடத்த வேண்​டும் என்​பது​தான் இன்​றைய அடிப்​படை தேவை. அறி​வியல், மருத்து​வம், தத்​து​வம்என அனைத்து துறை​கள் குறித்​தும் தமிழில் குறிப்​பிடப்பட்​டுள்​ளன.

தமிழ் படைப்​புகளை தேடிப் பிடித்து நமக்கு பதிப்பித்து தரு​கிறார்​கள் பதிப்​பகத்​தினர். பதிப்பக பணி ஓர் உன்​னத​மாக பணி. புத்தகங்கள் வாழ்க்​கையை உன்​னத​மாக்​கும். புத்​தகத்தை தலை குனித்து படித்​தால் அது நம்மை தலை உயர்த்​தச் செய்​யும். தொடர் வாசிப்பு அறிவை அகலப்​படுத்​தும். புத்​தகங்​களை நேசித்​தலும், அவற்றை சிறிது நேரத்தை செல​விடு​தலும் நம்மை மேலும் உணர்த்​தும் என்று அவர் கூறி​னார்.

முன்​ன​தாக, பபாசி தலை​வர் ஆர்​.எஸ்​.சண்​முகம் வரவேற்​றுப் பேசி​னார். நிறை​வாக செய​லா​ளர் எஸ்​.வ​யிர​வன் நன்றி கூறி​னார். விழா​வில் எழுத்​தாளர்​கள்​, புத்​தக ஆர்​வலர்​கள்​ கலந்​துகொண்​டனர்​.

<div class="paragraphs"><p>சென்னை புத்தகக் காட்சி நிறைவு விழாவின்போது பதிப்பகங்களில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த பணியாளர்களுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் விருதுகளை வழங்கினார். பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வயிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். | <em><strong>படம்:எஸ். சத்தியசீலன்</strong></em> |</p></div>
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: ரூ.1.30 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in