வானிலை முன்னறிவிப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை

வானிலை முன்னறிவிப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை
Updated on
1 min read

சென்னை: அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில், இன்று இலங்கை அருகேயும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மலாக்கா ஜலசந்திப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது நிகோபார் தீவுகளில் இருந்து தென்கிழக்கே 870 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல்–இலங்கை பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி, தெற்கு இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக இன்றும் (நவ.26), நாளையும் தென் தமிழகத்தில் சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 28-ம் தேதி கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 29-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 30-ம் தேதி வட தமிழகத்தில் சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், டிச.1-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்

லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழக கடலோர மாவட்டங்களில் 5 நாட்கள் கனமழை
கோவையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.43,844 கோடியில் 158 ஒப்பந்தம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in