பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மேம்பாடு தொடர்பாக ஐஐடி அறக்கட்டளை-ராணுவம் ஒப்பந்தம்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தின் இஎம்இ பிரிவு கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் கபூர், சென்னை ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் எம்.ஜெ.ஷங்கர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆவணங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தின் இஎம்இ பிரிவு கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் கபூர், சென்னை ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் எம்.ஜெ.ஷங்கர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆவணங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

Updated on
1 min read

சென்னை: பாது​காப்பு தொழில்​நுட்​பங்​கள் மேம்​பாடு தொடர்​பாக, சென்னை ஐஐடி அறக்​கட்​டளை​யுடன், இந்​திய ராணுவம் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

பாது​காப்பு தொழில்​நுட்​பங்​களை மேம்​படுத்​து​வது, ராணுவத் தொழில்​நுட்​பங்​களில் வெளி​நாடு​களை சார்ந்​திருப்​பதை குறைப்​பது தொடர்​பாக, சென்னை ஐஐடி பிர​வர்​தக் டெக்​னாலஜீஸ் அறக்​கட்​டளை​யுடன், இந்​திய ராணுவத்​தின் எலெக்ட்​ரானிக்ஸ் அண்ட் மெக்​கானிக்​கல் இன்​ஜினீயரிங் பிரிவு நேற்று புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் செய்​துள்​ளது.

பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் தலை​மைச் செயல் அலு​வலர் எம்​.ஜெ.ஷங்​கர் ராமன், இந்​திய ராணுவத்​தின் இஎம்இ பிரிவு கமாண்​டிங் அதி​காரி மேஜர் ஜெனரல் லலித் கபூர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்​திட்டனர். இந்த ஒப்​பந்​தத்​தின் தொடர்ச்​சி​யாக, ஆவடி​யில் ஆராய்ச்​சி, கண்​டு​பிடிப்பு ஒருங்​கிணைப்பு மையம் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

ஒப்​பந்​தம் குறித்து மேஜர் ஜெனரல் லலித் கபூர் கூறும்​போது, “ஐஐடி பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யுடன் இணைந்து செயல்​படு​வதன் மூலம் ராணுவத்​தின் இஎம்இ பிரிவு, ராணுவ நடவடிக்​கைகளை​யும், ஆயுதங்​களின் தரத்​தை​யும் மேம்​படுத்​து​வதை குறிக்​கோளாகக் கொண்​டுள்​ளது.

இதன்​மூலம், பாது​காப்பு தொழில்​நுட்​பங்​களுக்கு வெளி​நாடு​களைச் சார்ந்​துள்​ளதை கணிச​மாக குறைக்க முடி​யும்” என்​றார்.

ஐஐடி பிர​வர்​தக் அறக்​கட்​டளை​யின் வியூக ஆலோ​சகரும், தென்​பி​ராந்​திய ராணுவத்​தின் முன்​னாள் கமாண்​டிங் அதி​காரி​யு​மான லெப்​டினென்ட் ஜெனரல் கரன் சிங் பிரார் கூறும்​போது, “இந்த கூட்டு முயற்சி மூலம் கல்வி நிறு​வனம் மற்​றும் ராணுவத்​தின் திறமை​களை ஒருங்கே பயன்​படுத்​த முடியும்’’ என்றார்.

<div class="paragraphs"><p>புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவத்தின் இஎம்இ பிரிவு கமாண்டிங் அதிகாரி மேஜர் ஜெனரல் லலித் கபூர், சென்னை ஐஐடி பிரவார்டக் டெக்னாலஜீஸ் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அலுவலர் எம்.ஜெ.ஷங்கர் ராமன் ஆகியோர் கையெழுத்திட்டு ஆவணங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.</p></div>
தமிழகத்தைச் சேர்ந்த 10 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in