அறநிலையத் துறை மசோதாவுக்கு ஒப்புதல் கூடாது: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இந்து முன்னணி மனு

ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை மனு அளித்தார். உடன், தென்பாரத அமைப்பாளர் பக்தன்ஜி, மாநில அமைப்பாளர் ராஜேஷ், பொதுச்செயலாளர் கிஷோர்குமார், செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில செயலாளர் சேவுகன்.

ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவியை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோரிக்கை மனு அளித்தார். உடன், தென்பாரத அமைப்பாளர் பக்தன்ஜி, மாநில அமைப்பாளர் ராஜேஷ், பொதுச்செயலாளர் கிஷோர்குமார், செய்தித் தொடர்பாளர் இளங்கோவன், மாநில செயலாளர் சேவுகன்.

Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறைசட்​டத் திருத்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கக் கூடாது என ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யிடம் இந்து முன்​னணி​யினர் மனு அளித்​துள்​ளனர்.

ஆளுநர் மாளிகையில் இந்து முன்​னணி மாநிலத் தலைவர் காடேஸ்​வரா சி.சுப்​பிரமணி​யம் தலை​மை​யிலான நிர்​வாகி​கள் ஆளுநர் ஆர்​.என்​.ர​வியிடம் நேற்று மனு அளித்​தனர். அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழக சட்​டப்​பேர​வை​யில் கடந்த அக்.17-ம் தேதி இந்து சமய அறநிலை​யத் துறை சட்​டத்​தில் சில திருத்​தங்​கள் மேற்​கொள்​ளும் வகை​யில் ஒரு மசோதா (எண்​:40/2025) நிறைவேற்​றப்​பட்​டது.

‘கோ​யிலுக்​குச் சொந்​த​மான, அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள நிலங்​கள் மற்​றும் அதன் நிதி​யில் கல்வி நிறு​வனங்​கள், இசைப் பள்​ளி​கள், ஓது​வார் பள்​ளி​கள் நடத்த திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது’ என்று அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இந்த மசோதா தமிழகத்​தில் உள்ள கோயில்​களை ஒட்டுமொத்​த​மாக அழிக்​கும் உள் நோக்​கம் கொண்​டது. இதனால், மேலும் நிலங்​கள் கொள்ளை போவதற்​கும், கோயில் நிதி​யில் ஊழல் நடை​பெற​வும் வாய்ப்பு உள்​ளது. எனவே, இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் தரக் கூடாது. இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

இந்த சந்​திப்​பின்​போது, திருப்​பரங்​குன்​றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்​றும் விவ​காரம் குறித்த கருத்​துகளை​யும் ஆளுநரிடம் இந்து முன்​னணி​யினர் தெரி​வித்​தனர். ‘திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் நீதித் துறையை தமிழக அரசு மதிக்​க​வில்​லை. ஜனநாயகத்​தின் ஒரு தூணான நீதித் துறையை இழி​வுபடுத்​தும் நோக்​கில் அரசு செயல்​படு​வது அரசமைப்​புச் சட்​டத்​தின் மாண்பை சீர்​குலைப்​ப​தாகும். இதனால், சட்​டத்தை மதிக்க வேண்​டிய​தில்லை என்ற எண்​ணம் மக்​களுக்கு ஏற்​படும். இது மிகுந்த கவலை​யளிப்​ப​தாகும்’ என்று ஆளுநரிடம் அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இந்த சந்​திப்​பின்​போது, இந்து முன்​னணி தென்​பாரத அமைப்​பாளர் பக்​தன்​ஜி, மாநில அமைப்​பாளர் ராஜேஷ், மாநில பொதுச் செய​லா​ளர் கிஷோர்​கு​மார், மாநில செய்​தித் தொடர்​பாளர் இளங்​கோவன், மாநிலச் செய​லா​ளர் சேவு​கன்​ ஆகியோர்​ உடன்​ இருந்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in