நில முறைகேட்டை விசாரிக்க உயர்நிலை குழு இன்று பழநி வருகை

நில முறைகேட்டை விசாரிக்க உயர்நிலை குழு இன்று பழநி வருகை
Updated on
1 min read

பழநி: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​பிலான நிலப்​ப​திவு முறை​கேடு தொடர்​பாக விசா​ரணை நடத்த பதிவுத்​துறை சார்​பில் அமைக்​கப்​பட்ட 3 பேர் கொண்ட உயர்​நிலைக் குழு இன்று பழநிக்கு வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

திண்​டுக்​கல் மாவட்​டம் பழநி​யில் உள்ள தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​பிலான நிலத்தை முறை​கே​டாகப் பதிவு செய்த வழக்கை சிபிசிஐடி போலீ​ஸார் விசா​ரிக்​கின்​றனர். நேற்று முன்​தினம் சார்பதி​வாளர், மாவட்​டப் பதி​வாளர், நிலத்தை வாங்​கிய​வர்​கள் மற்​றும் அவர்​களது உறவினர்​களின் வீடு​களில் சிபிசிஐடி போலீ​ஸார் சோதனை நடத்​தி, முக்​கிய ஆவணங்​களைக் கைப்​பற்​றினர்.

மேலும், தலைமறை​வாக உள்ள நிலத்தை விற்ற தண்ட​பாணி சுவாமிகள் அறக்​கட்​டளை​யைச் சேர்ந்த முரு​க​தாஸ், நிலத்தை வாங்​கிய வெள்​ளைத்​துரை மற்​றும் சேதுபதி ஆகிய 3 பேரை​யும் போலீ​ஸார் தனிப்​படை அமைத்து தீவிர​மாகத் தேடு​கின்​றனர்.

சட்​ட​விரோத​மாக நிலத்தை விற்ற விழுப்​புரத்​தில் உள்ள முரு​க​தாஸ் வீட்​டில் சிபிசிஐடி போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர். முரு​க​தாஸ் தலைமறை​வாக உள்ள நிலை​யில் அவரது குடும்​பத்​தினரிடம் விசா​ரணை நடத்​தி​யதோடு, முக்​கிய ஆவணங்​களைப் பறி​முதல் செய்​தனர்.

இந்​நிலை​யில், நிலப்​ப​திவு முறை​கேடு தொடர்​பாக விசா​ரணை நடத்த பதிவுத்​துறை சார்​பில் அமைக்​கப்​பட்ட 3 பேர் கொண்ட உயர்​நிலை விசா​ரணைக் குழு இன்று பழநிக்கு வரவுள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இந்​தக் குழு​வில் கூடு​தல் பதிவுத் துறைத் தலை​வர், உதவி பதிவுத் துறைத் தலை​வர், மாவட்​டப் பதி​வாளர் ஆகிய 3 பேர் இடம் பெற்​றுள்​ளனர்.

பத்​திரப் பதிவு நடந்த நாளில் பணி​யில் இருந்த சார் பதி​வாளர், விடுப்​பில் சென்ற சார்பதி​வாளர், மாவட்​டப் பதிவாளர், அலு​வல​கப் பணியாளர் உள்​ளிட்​டோரிடம் இந்​தக் குழு​வினர் விரி​வான விசா​ரணை நடத்த உள்​ளனர். இக்​குழு​வினர் அளிக்​கும் அறிக்​கை​யின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும் எனக் கூறப்​படு​கிறது.

நில முறைகேட்டை விசாரிக்க உயர்நிலை குழு இன்று பழநி வருகை
உண்ணாவிரதப் போராட்டத்தை அரசு ‘அணுகும்’ முறை - சட்டம் சொல்வது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in