கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக பணிவரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

போட்டித் தேர்வு நடைமுறையை 6 மாதங்களில் முடிக்க அறிவுறுத்தல்
உயர் நீதிமன்றம் 

உயர் நீதிமன்றம் 

Updated on
2 min read

சென்னை: அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் பணி​யாற்​றும் கவுரவ விரிவுரை​யாளர்​களை உதவி பேராசிரியர்​களாக பணி வரன்​முறை செய்ய முடி​யாது என உயர்நீதிமன்றம் மறுப்பு தெரி​வித்​துள்ளது.

தமிழகத்​தில் அரசு கலை மற்​றும் அறி​வியல் கல்​லூரி​களில் கவுரவ விரிவுரை​யாளர்​களாக பணி​யாற்றி வந்​தவர்​கள், தங்​களை பணி வரன்​முறை செய்​து, உதவிப் பேராசிரியர்​களாக நியமிக்க வேண்​டும் என கோரிக்கை விடுத்து வந்​தனர்.

அதையடுத்து ஆயிரத்து 146 கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூல​மாக சிறப்​புத் தேர்வு நடத்​தி, உதவி பேராசிரியர்​களாக நியமிப்​பது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு அரசாணை பிறப்​பிக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் கடந்த 2022-ம் ஆண்​டு, ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன்​பாக 3 ஆண்​டு​களாக காலி​யாக இருந்த 4000 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கும் சேர்த்து தேர்வு நடத்த புதி​தாக அரசாணை வெளி​யிட்​டது.

இந்த அறி​விப்பை ரத்து செய்​யக் கோரி​யும், 2020-ம் ஆண்டு பிறப்​பிக்​கப்​பட்ட அரசாணைப்​படி தங்​களை பணிவரன்​முறை செய்​யக்​கோரியும் கவுரவ விரிவுரை​யாளர்​கள் தரப்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.

இந்த வழக்கை விசா​ரித்த தனிநீதிப​தி, கடந்த 2022-ம் ஆண்டு பிறப்​பித்த அரசாணையை ரத்து செய்​து, கவுரவ விரிவுரை​யாளர்​களை பணி வரன்​முறை செய்​வது தொடர்​பான 2020 அரசாணைப்​படி தேர்வு நடை​முறை​களை முடிக்க வேண்​டும் என கடந்த 2024 ஏப்​ரலில் உத்​தர​விட்​டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உயர் கல்​வித் துறை, கல்​லூரி கல்வி இயக்​குநரகம், ஆசிரியர் தேர்வு வாரி​யம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது.

இந்த மேல்​முறை​யீட்டை விசா​ரித்த நீதிப​தி​கள் ஆர்​.சுரேஷ்கு​மார், வி.லட்​சுமி நாராயணன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, கவுரவ விரிவுரை​யாளர்​கள் சம்​பந்​தப்​பட்ட கல்​லூரி​கள் அளவி​லான குழுக்​கள் மூல​மாக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ள​தால், அவர்​களின் கோரிக்​கையை ஏற்​பது என்​பது உச்ச நீதி​மன்​றம் வகுத்​தளித்த போட்​டித் தேர்வு நடை​முறை கொள்​கையை நீரத்​துப்​போகச் செய்​து​விடும் எனக்​கூறி தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​தனர்.

மேலும், பணி வரன்​முறை என்​பதும், தேர்வு நடை​முறை என்​பதும் வெவ்​வேறானவை என்​ப​தால் பணி வரன்​முறையை உரிமை​யாக கோர முடி​யாது. எனவே அரசு கல்​லூரி​களில் காலி​யாக உள்ள ஆயிரத்து 292 உதவி பேராசிரியர் பணி​யிடங்​களுக்​கான தேர்வு குறித்த அறி​விப்பை விரை​வில் வெளி​யிட வேண்​டும் என ஆசிரியர் தேர்வு வாரி​யத்​துக்கு தமிழக அரசு உத்​தர​விட வேண்​டும்.

இதுத​விர ஏற்​கெனவே 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணி​யிடங்​களுக்கு 42 ஆயிரத்து 64 பேர் விண்​ணப்​பித்​துள்​ள​தால் அவர்​களுக்​கும் போட்​டித் தேர்வு நடத்தி தேர்வு செய்ய வேண்​டும்; இதில் கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு அவர்​கள் பணி​யாற்​றிய அனுபவத்​தின் அடிப்​படை​யில் அதி​கபட்​ச​மாக 15 மதிப்​பெண்​கள் வரை வெயிட்​டேஜ் மதிப்​பெண் வழங்​கலாம்.

நீண்ட கால​மாக பணி​யாற்​றிய கவுரவ விரிவுரை​யாளர்​களுக்கு வயது வரம்​பில் தளர்வு வழங்க வேண்​டும். இந்த தேர்வு நடை​முறை​களை 6 மாதங்​களுக்​குள் முடிக்க வேண்​டும், என உத்​தர​விட்​டுள்​ளனர்.

தேர்வு நடை​முறை முடிந்து நியமன உத்​தர​வு​கள் வழங்​கும் வரை கவுரவ உதவி பேராசிரியர்​களாக பணி​யாற்றி வருபவர்​களை எக்​காரணம் கொண்​டும்​ பணிநீக்​கம்​ செய்​யக்​கூ​டாது என்​றும்​ நீதிப​தி​கள்​ தங்​களது உத்​தர​வில்​ தெரி​வித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>உயர் நீதிமன்றம்&nbsp;</p></div>
நீதிபதிகளை புனிதர்களாக சித்தரிக்கும் அவசியமில்லை: ‘கருப்பு’ பட வழக்கில் நீதிபதிகள் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in