சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு: பொன்முடிக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பொன்முடி | கோப்புப்படம்
பொன்முடி | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: சைவம், வைணவம் குறித்​தும், பெண்​கள் குறித்​தும் சர்ச்​சைக்​குரிய வகை​யில் பேசிய விவ​காரத்​தில் தனக்கு எதி​ராக தொடரப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக் கோரி திமுக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி தாக்​கல் செய்த மனுவை சென்னை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

திமுக முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி சென்​னை​யில் கடந்த 2025 ஏப்​ரல் மாதம் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், சைவம், வைணவம் குறித்​தும், பெண்​கள் குறித்​தும் பேசி​யது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யது. இதுதொடர்​பாக சைதாப்​பேட்டை குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் பொன்​முடிக்கு எதி​ராக சென்னை மாநக​ராட்சி பாஜக கவுன்​சிலர் உமா ஆனந்​தன் வழக்கு தொடர்ந்​தார்.

எம்​.பி. எம்​எல்​ஏக்​கள் மீதான சிறு வழக்​கு​களை விசா​ரிக்​கும் ஜார்ஜ் டவுன் 3-வது குற்​ற​வியல் நடு​வர் நீதி​மன்​றத்​தில் இந்த வழக்கு நிலு​வை​யில் இருந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், தனக்கு எதி​ரான இந்த வழக்கை விசா​ரணைக்கு ஏற்று ஜார்ஜ் டவுன் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை ரத்து செய்​யக் கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் பொன்​முடி மனு தாக்​கல் செய்​தார். நீதிபதி ஜி.கே.இளந்​திரையன் முன்பு இந்த மனு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடை​பெற்ற வாதம்:

பொன்​முடி தரப்​பில் மூத்த வழக்​கறிஞர் என்​.ஆர்​. இளங்கோ: மூடிய அரங்​கில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தெரி​வித்த கருத்து தொடர்​பாக தனி நபர் புகார் கொடுத்​துள்​ளார். இந்த வழக்கை தாக்​கல் செய்​யும் முன்​பாக அரசின் முன்​அனு​மதி பெற​வில்​லை. எனவே, வழக்கை விசா​ரணைக்கு ஏற்று சிறப்பு நீதி​மன்​றம் பிறப்​பித்​துள்ள உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்.

மனு​தா​ரர் உமா ஆனந்​தன் தரப்​பில் வழக்​கறிஞர் எஸ்​.மகேஷ்: அப்​போது அமைச்​ச​ராக இருந்த பொன்​முடி தனது வெறுப்பு பேச்​சின் ஆழம் என்ன என்​பதை நன்கு அறிந்தே சைவம், வைணவம் குறித்​தும், பெண்​கள் குறித்​தும் பேசி​யுள்​ளார். அவரது பேச்சு தொடர்​பாக சென்னை உயர் நீதி​மன்​றம் தாமாக முன்​வந்து விசா​ரித்து பொன்​முடிக்கு எதி​ராக வழக்கு பதிவு செய்ய உத்​தர​விட்​டது.

ஆனால், கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில், ‘பொன்​முடி​யின் இந்த பேச்​சால் பொது அமை​திக்கு எந்த குந்​தக​மும் ஏற்​பட​வில்​லை’ என்று கூறி, அவருக்கு எதி​ரான புகார்​களை போலீ​ஸார் முடித்து வைத்​தனர். இதனால்​தான், பொன்​முடிக்கு எதி​ராக தனி​நபர் புகார் கொடுக்​கப்​பட்டு வழக்கு தொடரப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு வாதம் நடை​பெற்​றது.

இரு தரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, ‘‘இந்​துக்​களுக்கு எதி​ராக நாத்​தி​கர்​களை தூண்​டி​விடும் வகை​யில் வெறுப்புப் பேச்சை பொன்​முடி பேசி​யுள்​ளது தெரி​கிறது. அவர் மீதான வழக்கை ரத்து செய்ய எந்த முகாந்​திர​மும் இல்​லை’’ என கூறி பொன்​முடி தாக்​கல் செய்த மனு தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளார். மேலும், பொன்​முடி மீதான வழக்கை 6 மாதத்​தில்​ முடிக்​க வேண்​டும்​ என்​றும்​ நீதிப​தி உத்​தர​விட்​டுள்​ளார்​.

பொன்முடி | கோப்புப்படம்
செந்தில் பாலாஜி, அவரது தம்பியை கைது செய்ய போலீஸார் தீவிரம்: கரூரில் முகாமிட்டு தீவிர சோதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in