சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாத விவகாரம்: அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாத விவகாரம்: அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

Published on

சென்னை: ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் உள்ள சாலை​யோர ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றாத விவ​காரத்​தி்ல் நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தாத மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் மற்​றும் டிஜிபிக்கு உத்​தர​வி்ட்​டுள்ள உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள், அரசின் துறை​களுக்கு இடையே ஒரு​மித்த எண்​ணம் இல்லை என்​றால் பொது​மக்​களுக்​குத்​தான் பாதிப்பு என குற்​றம் சாட்டி விசா​ரணையை தள்ளி வைத்​துள்​ளனர்.

சென்னை ஜார்ஜ் டவுன் பகு​தி​யில் தனக்கு சொந்​த​மான நிலத்​தில் வீடு கட்ட பிரமிளா என்​பவர் சிஎம்​டிஏ-​விடம் இரு​முறை தி்ட்ட அங்​கீ​காரம் பெற்​றும் அந்த இடத்​துக்கு செல்​லும் பாதையை சிலர் ஆக்​கிரமித்து இருந்​த​தால் வீட்டை கட்​ட​முடிய​வில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், வீட்​டுக்கு செல்​லும் பாதை​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அதி​காரி​களுக்கு உத்​தர​விட்​டது. ஆனால், அதிகாரிகள் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்லை என கூறி உயர் நீதி​மன்​றத்​தில் பிரமிளா அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்கு விசா​ரணை நீதிப​தி​கள் எஸ்​.எம்​.சுப்​ரமணி​யம், சி.குமரப்​பன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது மனு​தா​ரர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணி​யன் ஆஜராகி, ‘‘கடந்த 2012-ம் ஆண்டே திட்ட அனு​மதி பெற்று காலா​வ​தி​யாகி விட்​டது.

மீண்​டும் திட்ட அனு​மதி பெற்​றும் சாலை ஆக்​கிரமிப்பு காரண​மாக இது​வரை வீட்டை கட்ட முடிய​வில்​லை. ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றும் விவ​காரத்​தில் சென்னை மாநக​ராட்சி மற்​றும் போலீ​ஸார் எந்த ஒத்​துழைப்​பும் வழங்​க​வில்​லை.

சாலையை ஆக்​கிரமித்​துள்​ளவர்​களின் வீடு​களுக்கு வழங்​கப்​பட்​டுள்ள மின்​இணைப்பை துண்​டிக்​கும்​படி உயர் நீதிமன்​றம் உத்​தர​விட்​டும் அந்த உத்​தர​வை​யும் அதிகாரிகள் மதிக்​க​வில்​லை’’ என குற்​றம் சாட்​டி​னார்.

அப்​போது மாநக​ராட்சி தரப்​பில், இந்த பகு​தி​யில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற பாது​காப்பு கோரி போலீ​ஸாருக்கு 4 முறை கடிதம் எழு​தி​யும் எந்த பதி​லும் இல்​லை. போலீ​ஸார் பாது​காப்பு அளித்​தால் மட்​டுமே ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற முடி​யும், என தெரிவிக்​கப்​பட்​டது.

அதற்கு காவல்​துறை தரப்​பில், மாநக​ராட்சி எழு​திய கடிதங்​களில் எந்த தேதி​யில் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும். எவ்​வளவு போலீ​ஸார் பாது​காப்பு அளிக்க வேண்​டுமென எந்த விவர​மும் தெரிவிக்​கப்​படவில்​லை, என தெரிவிக்​கப்​பட்​டது.

மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை தரப்பு வாதங்​களால் கோபமடைந்த நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் கட்​டு்ப்​பாட்​டின்​கீழ் உள்ள துறை​களுக்கு இடையே நீதி​மன்ற உத்​தரவை அமல்​படுத்​தும் விஷ​யத்​தில் ஒரு​மித்த எண்​ணம் இல்​லை.

இப்​படி அதிகாரிகள் தங்​களுக்​குள் ஒரு​வர் மீது ஒரு​வர் பழிசுமத்தி நாட்​களை கடத்​தி​னால் பாதிப்பு பொது​ மக்​களுக்​குத்​தான். இது​போன்ற அதி​காரி​களின் செயல்​பாட்டை ஒரு​போதும் ஏற்க முடி​யாது.

ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை வேண்​டுமென்றே அவம​தித்த மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

இது​போல, அதி​காரி​களுக்​கிடையே ஒருங்​கிணைப்பு இல்​லாததை பல வழக்​கு​களில் பார்த்து விட்​டோம். அதனால்​தான் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கு​களின் எண்​ணிக்​கை​யும் அதி​கரித்து வரு​கிறது. பொது​மக்​களுக்​கும் உயர் நீதி​மன்​றம் மீதான நம்​பிக்கை குறைந்து வரு​கிறது.

எனவே, இந்த வழக்​கில் நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் மற்​றும் தமிழக அரசின் டிஜிபி ஆகியோரை தாமாக முன்​வந்து எதிர்​மனு​தா​ரர்​களாக சேர்க்​கிறோம். அவர்​களாவது இந்த சாலை ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

அதே​போல காலம் தாழ்த்​திய அதிகாரிகள் மீதும் துறை ரீதி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த வழக்​கில் எடுக்​கப்​பட்ட நடவடிக்கை குறித்து வரும் ஜன.5-ம் தேதி இரு​வரும்​ அறிக்​கை தாக்​கல்​ செய்​யவேண்​டும்​. என உத்​தர​வி்ட்​டு வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​துள்​ளனர்​.

சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றாத விவகாரம்: அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு
குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஆத்திரம்: இளைஞரை கடத்தி பணம் பறித்த ரவுடிகள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in