திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ​திருப்போரூர் கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான இடங்​களில் உள்ள ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்​றி, 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென, அறநிலை​யத்​துறை மற்​றும் வரு​வாய் துறைக்கு கெடு விதி்த்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, வழக்​கறிஞர் பி. ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ‘செங்​கல்​பட்டு மாவட்​டம், திருப்​போரூரில் உள்ள கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்​புள்ள 2 ஆயிரம் ஏக்​கர் சொத்​துக்​களில், 550 ஏக்​கருக்​கும் மேற்​பட்ட சொத்​துக்​களை தனி நபர்​கள் ஆக்​கிரமித்​துள்​ளனர்.

எனவே, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை வரு​வாய்​துறை அதி​காரி​கள் மூல​மாக அளவீடு செய்​து, ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற அறநிலை​யத் துறை மற்​றும் தமிழக அரசின் வரு​வாய்த் துறை செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்’ என, கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை ஏற்​க​னவே விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், 2022 மே மாதத்​துக்​குள் ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டுமென உத்​தர​விட்​டிருந்​தது. ஆனால், உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​ற​வில்லை எனக் கூறி, வழக்​கறிஞர் ஜெகந்​நாத் உயர் நீதி​மன்​றத்​தில் அவம​திப்பு வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

இந்த வழக்​கு, தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிப​தி​கள், இ்ந்த அவம​திப்பு வழக்கு கடந்த ஓராண்​டுக்​கும் மேலாக நிலு​வை​யில் இருந்து வரு​கிறது. இன்​னும் அறிக்கை தாக்​கல் செய்​யாமல் இருப்​பது ஏன் என கேள்வி எழுப்​பினர்.

நீதிபதிகள் அதிருப்தி: அதற்​கு, அறநிலை​யத் துறை தரப்​பி்ல் ஆஜரான சிறப்பு அரசு வழக்​கறிஞர் என்​.ஆர்​.ஆர்​. அருண் நடராஜன், கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான 125 ஏக்​கர் நிலத்தை 233 பேர் ஆக்​கிரமித்து இருப்​பது ஆய்​வில் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவர்​களை அந்த நிலத்​தில் இருந்து சட்ட ரீதி​யாக அப்​புறப்​படுத்​து​வதற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது.

சிலர் வாடகை செலுத்த முன் வந்​துள்​ளனர். எனவே, ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி அறிக்கை தாக்​கல் செய்ய 3 வாரம் அவகாசம் வழங்க வேண்​டும் என, கோரி​னார்.

இதையடுத்து நீதிப​தி​கள், அவம​திப்பு வழக்கு நிலு​வை​யில் இருக்​கும் போது, கந்​த​சாமி கோயில் மற்​றும் ஆளவந்​தார் அறக்​கட்​டளைக்கு சொந்​த​மான சொத்​துக்​களை அபகரித்து ஆண்​டுக்​கணக்​கில் அனுப​வித்து வரும் ஆக்​கிரமிப்​பாளர்​களை எப்​படி வரன்​முறைப்​படுத்த முடி​யும் என அதிருப்தி தெரி​வித்​தனர்.

பின்​னர், இந்த வழக்​கில் ஆக்​கிரமிப்​பு​களை முழு​மை​யாக அகற்றி 3 வாரங்​களில் அறிக்கை தாக்​கல் செய்ய வேண்​டுமென அறநிலை​யத் துறைக்​கும், வரு​வாய் துறை​யினருக்​கும் கெடு வி​தித்​து வி​சா​ரணை​யை தள்​ளி வைத்​தனர்​.

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்க வைத்த 2 போலீஸார் சஸ்பெண்ட்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in