கே.கே.நகரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

கே.கே.நகரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: சென்னை கே.கே.நகரில் அரசி​யல் கட்​சிகள் சார்​பில் பொதுக்​கூட்​டங்​கள் நடத்த அனு​மதி வழங்க எதிர்ப்பு தெரி​வித்து தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, சென்னை கே.கே.நகர் குடி​யிருப்​போர் நலச் சங்க பொதுச் செய​லா​ள​ரான ரவிசங்​கர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், ``கே.கே.நகர் பகு​தி​யில் குடி​யிருப்​பு​கள் அதி​கம் உள்​ளது.

கே.கே.நகர் பகு​தி​யில் அரசி​யல் கட்​சி​யினர் உரிய அனு​ம​தி​யின்றி பொதுக்​கூட்​டங்​களை​யும், ஆர்ப்​பாட்​டங்​களை​யும் நடத்​து​வ​தால் பள்ளி செல்​லும் மாணவ, மாண​வியர், அலு​வல​கங்​களுக்கு செல்​வோர், பொது​மக்​கள் கடுமையாக பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

மேலும் இது​போன்ற பொதுக்​கூட்​டங்​களுக்கு அதிக ஒலி எழுப்​பும் ஒலிபெருக்​கி​கள் பயன்​படுத்​தப்​படு​வ​தால் குடி​யிருப்​பாளர்​கள் கடும் அவதிக்​குள்​ளாகி இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​படு​கிறது.

எனவே கே.கே.நகர் பகு​தி​யில் பொதுக்​கூட்​டங்​கள் மற்​றும் ஆர்ப்​பாட்​டம், போராட்​டங்​கள் நடத்த தடை விதிக்க வேண்​டும்'' எனக் கோரி​யிருந்​தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி.அருள் முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசா​ரணைக்கு வந்​தது.

அப்போது நீதிப​தி​கள், இந்த வழக்கு கடந்த 2024-ம் ஆண்டு நடந்த பொதுக்​கூட்​டத்தை சுட்​டிக்​காட்டி தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

சமீபத்​தில் எங்​கு, எப்​போது பொதுக்​கூட்​டம் நடத்​தப்​பட்​டது. அதனால் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்​பட்​டது என்​பது குறித்து எந்த விவர​மும் தெரிவிக்​கப்​பட​வில்லை எனக்​கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்​தர​விட்​டுள்​ளனர்​.

கே.கே.நகரில் அரசியல் பொதுக்கூட்டங்கள் நடத்த எதிர்ப்பு: வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
வடசென்னையில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: தனியார் நிறுவன பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பொதுமக்கள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in