பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு
Updated on
2 min read

மதுரை: பழநி​யில் ரூ.100 கோடி மதிப்​புள்ள கோயில் நிலம் தனி நபர்​கள் பெயரில் பத்​திரப் பதிவு செய்​ததை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

பழநி தண்​ட​பாணி சுவாமிகள் மடத்​துக்​குச் சொந்​த​மான ரூ.100 கோடி மதிப்​புள்ள 1.35 ஏக்கர் நிலம் பழநி அடி​வாரத்​தில் உள்​ளது. இந்த நிலத்தை அறக்​கட்​டளை​யிடம் இருந்து வாங்கி இருப்​ப​தாக​வும், அந்த நிலத்தை தங்​கள் பெயருக்கு பத்​திரப் பதிவு செய்ய பழநி சார்​ப​தி​வாள​ருக்கு உத்​தர​விடக்​கோரி​யும் சேதுப​தி, வெள்​ளைத்​துரை ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக் கல் செய்​தனர்.

இந்த மனுவை விசாரித்த தனி நீதிப​தி, பத்​திரம் பதிவுசெய்ய சார்​ப​தி​வாள​ருக்கு உத்​தர​விட்​டார். இதையடுத்து அந்த கோயில் நிலம் தனிநபர்​கள் பெயரில் பத்​திரப்​ப​திவு செய்​யப்​பட்​டது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்​பியது. பத்​திரப்​ப​தி​வில் மோசடி நடந்​திருப்​ப​தாகக் கூறி சார்​ப​தி​வாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில் தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்​யக் கோரி மடத்​தின் தக்​கார் தரப்பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்வில் மேல்​முறை​யீடு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. அதில், கோயில் நிலம் தொடர்​பாக ஏற்​கெனவே தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்​கு, கடந்த 2024 ஆக.19 அன்று தள்​ளு​படி​யானது. இருப்​பினும், அந்த வழக்கு நிலு​வை​யில் இருப்​ப​தாக ஒரு தோற்​றத்தை உரு​வாக்கி நீதி​மன்​றத் தில் தவறான தகவல்​களை அளித்து பத்​திரப்​ப​திவு செய்ய உத்​தரவு பெற்​றுள்​ளனர்.

இந்த நிலத்​தின் சட்​டப்​பூர்​வ உரிமை மற்​றும் நிர்​வாகம் பழநி கோயில் செயல் அலு​வலரிடம்​தான் உள்​ளது. தக்​காரை எதிர் மனு​தா​ர​ராகக் கூட சேர்க்​காமல், அவரது தரப்பு வாதங்​களைக் கேட்​காமலேயே தனி நீதிபதி, பத்திரப் பதிவுக்கு அனு​மதி வழங்கி உள்​ளார். இந்த நிலப் பரி​மாற்​றம் தொடர்​பாக தக்​கா​ரால் தொடரப்​பட்ட மற்​றொரு வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் இருப்​பதை சார்​ப​தி​வாளர் நீதி​மன்​றத்​தின் கவனத்​துக்கு கொண்டு செல்லத்தவறிவிட்​டார்.

பொது சொத்து மற்​றும் ஆன்​மிக மடத்​தின் பல கோடி ரூபாய் மதிப்​புள்ள சொத்​துகளை தனி நபர்​கள் அபகரிப்​ப​தைத் தடுக்​கும் பொருட்​டும், சட்​டம் மற்​றும் உண்​மைக்​குப் புறம்​பாக பிறப்​பிக்​கப்​பட்ட தனி நீதிப​தி​யின் உத்​தரவை முழு​மை​யாக ரத்து செய்து உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை நீதிப​தி​கள் கார்த்​தி​கேயன், சக்​திவேல் அமர்வு நேற்று விசா​ரித்​தது. பின்​னர் நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில் கூறியிருப்பதாவது:

பதிவு செய்​யப்​பட்​டுள்ள இடம் கோயில் நிர்​வாகத்​துக்​குச் சொந்​த​மானது என ஏற்​கெனவே தீர்ப்​பு​கள் உள்​ளன. தனி நீதிப​தி​யிடம் உரிய எதிர் தரப்​பினரைச் சேர்க்​காமல் உத்​தரவை பெற்​றுள்​ளனர். இது நீதி​மன்​றத்தை ஏமாற்றி பெறப்​பட்ட உத்​தர​வாகும். அந்த இடத்தை பத்​திரப்​ப​திவு செய்​யக் கூடாது எனக் கோயில் நிர்​வாகம் ஏற் கெனவே பதிவுத்​துறை​யிடம் தெரி​வித்​துள்​ளது.

இருப்​பினும் சொத்தை பதிவு செய்ய வேண்​டும் என்​ப​தற்​காகவே, வழக்​க​மான சார் ​ப​தி​வாளரை விடுப்​பில் அனுப்பி விட்​டு, பொறுப்பு சார்​ப​தி வாளரை வைத்து பத்​திரப்​பதிவு செய்​துள்​ளனர். இது முற்​றி​லும் முறை​கே​டாக நடந்த செயலாகும். பிரச்​சினைக்​குரிய மத வழி​பாட்டு இடங்​களில் பத்​திரப் பதிவு செய்​யும்​போது கோயில் நிர்வாகம் உள்பட அனைத்து தரப்பு வாதங்​களை​யும் கேட்​ட பிறகே முடிவு செய்ய வேண்​டும் என பத்​திரப் பதிவு சட்​டத்​திலேயே கூறப்​பட்​டுள்​ளது. அப்​படி​யான சூழலில் சார்​ப​தி​வாளர் எதை​யும் கருத்​தில் கொள்ளாமல் தன்​னிச்​சை​யாக முறை​கே​டாக பதிவு செய்​துள்​ளார்.

ஒரு சார்​ப​தி​வாளர் இவ்வாறு எப்​படி முறை​கே​டான பதிவு​களை மேற்​கொள்ள முடி​யும் எனக் கேள்வி எழுப்​பியபோது, அரசு தரப்​பில் அவர் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாகத் தெரிவிக்​கப்​பட்​டது. தற்​காலிகப் பணி நீக்​கம் என்​பது போது​மான​தாக இல்​லை. எனவே பத்​திரப் பதிவு முறை​கே​டாக நடை​பெற்​றுள்​ள​தால், அது செல்​லாது. ரத்து செய்​யப்​படு​கிறது. இவ்​வாறு உத்​தர​விட்டனர்.

சிபிசிஐடி விசாரணை

இதற்கிடையில், கோயில் நில முறைகேடு வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நேற்று உத்தரவிட்டார்.

சார்பதிவாளரை கைது செய்யத் தடை

பழநியில் ரூ.100 கோடி கோயில் நிலத்தை தனி நபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சார் பதிவாளரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பழநியில் கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். மனுவை நீதிபதி ராஜசேகர் நேற்று விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் தொடர்புடைய வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்றார். பின்னர் நீதிபதி, மனு தொடர்பாக சிபிசிஐடி பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை ஜூலை 17-க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை கைது செய்யக் கூடாது என உத்தரவிட்டார்.

பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நில பத்திரப் பதிவு ரத்து: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முக்கிய உத்தரவு
Realme Narzo 100x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in