அரசு வழக்கறிஞர் பதவிகளை காங்கிரஸ் கோரிய விவகாரம்: பதிலளிக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அமைச்சருக்கு கடிதம் எழுதிய நிலையில் வழக்கு விசாரணை
Santhanakoodu Festival

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு

Updated on
1 min read

மதுரை: தமிழகத்​தில் உயர் நீதி​மன்​றம், மாவட்ட நீதி​மன்​றங்​களில் அரசு வழக்​கறிஞர்​கள் பதவி கேட்டு காங்​கிரஸ் கட்சி சார்​பில் கடிதம் அனுப்​பியது தொடர்​பாக விரி​வாக பதிலளிக்க, தமிழக அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்​கறிஞர் செல்​வகு​மார், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு: தமிழகத்​தில் தவெக ஆட்​சிக்கு வந்​ததும், முந்​தைய திமுக ஆட்​சி​யில் அரசு வழக்​கறிஞர்​களாகப் பணிபுரிந்​தவர்​கள் பதவி வில​கினர். இதையடுத்​து, புதிய அரசு சார்​பில் உயர் நீதி​மன்​றம் மற்​றும் மாவட்ட நீதி​மன்​றங்​களில் ஆஜராக அரசு வழக்​கறிஞர்​கள் நியமிக்​கப்​பட்டு வரு​கின்​றனர்.

அரசு வழக்​கறிஞர்​கள் நியமனத்​தில் வெளிப்​படைத்​தன்மை இருக்க வேண்​டும், அரசி​யல் தலை​யீடு இருக்​கக் கூடாது, உரிய தகு​தி​யுடைய​வர்​களை​தான் அரசு வழக்​கறிஞர்​களாக நியமிக்க வேண்​டும் என உச்ச நீதி​மன்​றம் ஏற்​கெனவே உத்​தர​விட்​டுள்​ளது. கடந்​தாண்டு உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் அரசு வழக்​கறிஞர்​கள் நியமனம் நடை​பெற்​ற​போது, உச்ச நீதி​மன்ற உத்​தரவு பின்​பற்​றப்​பட​வில்​லை. இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு நிலு​வை​யில் உள்​ளது.

இந்​நிலை​யில், சென்னை உயர் நீதி​மன்​றம், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் குற்​ற​வியல் பிரிவு அரசு வழக்​கறிஞர்​கள் நியமனம் தொடர்​பாக விண்​ணப்​பிக்க கடந்த மாதம் அறி​விப்​பாணை வெளி​யிடப்​பட்​டது. இச்​சூழலில் தற்​போதைய ஆளுங்​கட்​சி​யின் கூட்​டணி கட்​சி​யான காங்​கிரஸ் உச்ச நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம், மாவட்ட நீதி​மன்​றங்​களில் தங்​கள் கட்​சி​யினருக்கு அரசு வழக்​கறிஞர் பதவி கேட்டு கடிதம் கொடுத்​திருப்​ப​தாக தகவல் கிடைத்​துள்​ளது. இது அரசு வழக்​கறிஞர் நியமனம் தொடர்​பாக உச்ச நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வுக்கு எதி​ரானது.

எனவே, அரசு வழக்​கறிஞர் நியமனம் வெளிப்​படை​யாக நடை​பெறும் வகை​யில் நிலை​யான செயல்​முறை​களை உரு​வாக்கி அமல்​படுத்​த​வும், அது​வரை கூட்​டணி கட்சி சார்​பில் வழங்​கப்​பட்​டுள்ள பட்​டியலில் இருப்​பவர்​கள் மற்​றும் வேறு தனி பரிந்​துரைகளின் அடிப்​படை​யில் அரசு வழக்​கறிஞர்​களை

நியமிக்க இடைக்​கால தடை விதித்​தும் உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டிருந்​தது.

மனுவை நீதிப​தி​கள் சதீஷ்கு​மார், ஜோதி​ராமன் அமர்வு விசா​ரித்​தது. அரசு தரப்​பில், சமூக வலை​தளங்​களில் வெளி​யான தகவல்​களின் அடிப்​படை​யில் வழக்​குத் தொடரப்​பட்​டுள்​ளது எனக் கூறப்​பட்​டது. அப்​போது நீதிப​தி​கள், சமூக வலை​தளங்​களில் வந்த தகவல் என்​றாலும், ஒரு அரசி​யல் கட்சி சட்ட அமைச்​சருக்கு பரிந்​துரை கடிதம் அனுப்​பி​யுள்​ளது. இதுதொடர்​பாக என்ன நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது எனக் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு அரசுத் தரப்​பில், கடிதத்​தில் பரிந்​துரைக்​கப்​பட்ட நபர்​கள் அரசு வழக்​கறிஞர்​களாக நியமனம் செய்​யப்​பட​மாட்​டார்​கள் எனக் கூறப்​பட்​டது. பின்​னர் நீதிப​தி​கள், கடிதம் தொடர்​பாக விரி​வான பதில் மனு தாக்​கல் செய்ய அரசுக்கு உத்​தர​விட்​டு, விசா​ரணையை தள்​ளி​வைத்​தனர்.

Santhanakoodu Festival
“பெண்களுக்கு எதிரான குற்றங்களை சகித்துக் கொள்ளவே முடியாது” - முதல்வர் விஜய் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in