கூடுவாஞ்சேரியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: மணிப்பூரில் ஏ.கே.47 பாதுகாப்புடன் தம்பதியை மடக்கிய போலீஸார்

யூடியூப் பார்த்து உடலை துண்டித்து அகற்றியதாக வாக்குமூலம்
மணிக் உத்தீன் லஸ்கர், பகவதி மாஜி ஆகியோரை கைது செய்து அழைத்து வரும் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸ்.

மணிக் உத்தீன் லஸ்கர், பகவதி மாஜி ஆகியோரை கைது செய்து அழைத்து வரும் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸ்.

Updated on
1 min read

தாம்பரம்: கூடு​வாஞ்​சேரி​யில் பெண் கொலை வழக்​கில் தலைமறை​வாக இருந்த மணிக் உத்​தீன் லஸ்​கர் (22), அவரது மனைவி பகவதி மாஜியை, நக்​சல் ஆதிக்கம் நிறைந்த மணிப்​பூர் பகு​தி​யில் ஏ.கே.47 துப்​பாக்கி ஏந்​திய போலீஸ் பாது​காப்​புடன் சென்று கூடு​வாஞ்​சேரி தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர்.

கூடு​வாஞ்​சேரி​யில், ஒடிசா மாநிலத்​தைச் சேர்ந்த ஹயாத்​துன் நிஷா (38) என்ற பெண் கடந்த ஆக.2-ம் தேதி கொலை செய்​யப்​பட்ட வழக்​கில் தலைமறை​வாக இருந்த மணிக் உத்​தீன் லஸ்​கர் என்​பவர் மணிப்​பூர் மாநிலம் ஜிரி​பாம் காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட நக்​சல் ஆதிக்​கம் நிறைந்த பகு​தி​யில் பதுங்​கி​யிருப்​பது தனிப்​படை போலீ​ஸாருக்கு தெரிய​வந்​தது.

அங்கு தனி​யாக செல்​வது பாது​காப்​பானது இல்லை என மணிப்​பூர் போலீ​ஸார் எச்​சரித்​தனர். இதையடுத்து ஏ.கே.47 துப்​பாக்கி ஏந்​திய மணிப்​பூர் போலீ​ஸாரின் பாது​காப்​புடன் சென்ற கூடு​வாஞ்​சேரி தனிப்​படை போலீ​ஸாரை பார்த்த மணிக் உத்​தீன் அங்​கிருந்து தப்​பியோடி​னார்.

இதையடுத்து போலீ​ஸார் மணிப்​பூரைச் சேர்ந்த ஒரு​வர் மூலம், மணிக் உத்​தீனை மோட்​டார் சைக்​கிளில் தப்​பிச் செல்​லு​மாறு கூறச் செய்​தனர். அதன்பதிவு எண் மற்​றும் அவர் செல்​லும் வழியை அறிந்த போலீ​ஸார், துரத்​திச் சென்று அவரை சுற்​றிவளைத்து கைது செய்​தனர். அவர் அளித்த தகவலின் பேரில் பகவதி மாஜி​யும் சிக்​கி​னார்.

ஹயாத்​துன் நிஷா (38) விஷம் கொடுத்து கொலை செய்​யப்​பட்​டது மணிக் உத்​தீன் லஸ்​கரிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் தெரிய​வந்​தது. அவர் மேலும் அளித்​த​தாகக் கூறப்​படும் வாக்​கு மூலத்​தில், நிஷா கர்ப்​ப​மான​தால் கொலை செய்​த​தாக​வும், அதன் பிறகு உடலை அப்​புறப்​படுத்​து​வது குறித்து யூடியூப் வீடியோக்​களை பார்த்து அதன்​படி செய்​த​தாக​வும் தெரி​வித்​துள்​ளார்.

இரு​வரை​யும் சென்​னைக்கு அழைத்து வந்த போலீ​ஸார், 6 நாட்​கள் காவலில் எடுத்து தொடர்ந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். துணிச்​சலுடன் செயல்​பட்டதனிப்​படை போலீ​ஸாரை கமிஷனர் பிரே​மானந்த் சின்ஹா மற்​றும்​ உயர்​ அதி​காரி​கள்​ பா​ராட்​டினர்​.

<div class="paragraphs"><p>மணிக் உத்தீன் லஸ்கர், பகவதி மாஜி ஆகியோரை கைது செய்து அழைத்து வரும் கூடுவாஞ்சேரி தனிப்படை போலீஸ்.</p></div>
சோமங்கலம் ஏடிஎம் கொள்ளை வழக்கு: துப்பாக்கியை காட்டி தப்பிய கும்பலில் ஒருவர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in