சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை
Updated on
1 min read

சென்னை: சிறுமிகள் வன்​கொடுமைக்கு உள்​ளாக்​கப்​பட்ட வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்ள ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை 3 நாள் காவலில் எடுத்து போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர்.

சென்​னையில் 84 வயது முதி​ய​வர் ஒரு​வர் சிறுமியை பாலியல் ரீதி​யாக துன்​புறுத்​தி​யது தொடர்​பான வீடியோ காவல் ​துறை​யினருக்கு கிடைத்​தது. இதுகுறித்​து சென்னை பாலியல் தடுப்பு பிரிவு போலீ​ஸார் கடந்த அக்​டோபரில் போக்சோ உள்​ளிட்ட பல்வேறு பிரிவு​களின் கீழ் வழக்​கு பதிவு செய்து விசா​ரணையை தொடங்​கினர்.

இதுதொடர்பாக பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவன அதிபர் வீரமணி (84) மற்றும் சாந்தி, அவரது கணவர் மகேந்​திர சிம்​கன் ஆகியோரை போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். இந்த விவகாரத்தில் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல தொழிலதிபர்களுக்கு இதில்தொடர்பு உள்ளது என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. பாதிக்​கப்​பட்ட சிறுமி ஒரு​வர் போலீ​ஸாரிடம் இதுபற்றி தெரி​வித்​துள்​ளார். இதைத் ​தொடர்ந்​து, சிறை​யில் அடைக்​கப்​பட்​டிருந்த வீரமணியை போலீ​ஸார் 3 நாள் காவலில்​ எடுத்​து தற்​போது விசா​ரித்​து வரு​கின்றனர்.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: கிரானைட்ஸ் அதிபர் வீரமணியை காவலில் எடுத்து விசாரணை
எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in