இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்

இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்
Updated on
2 min read

மதுரை: ​மா​னாமதுரை​யில் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்ட இளைஞர் மரண வழக்கு சிபிஐசிஐடி விசா​ரணைக்கு மாற்​றப்​பட்டு அதி​காரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார் என உயர் நீதி​மன்​றத்​தில் அரசுத் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

சிவகங்கை மாவட்​டம் மானாமதுரை சீயோன் நகர் பகு​தி​யில் கடந்த வெள்​ளிக்​கிழமை நள்​ளிரவு ஏற்​பட்ட தகராறில் இரு​வர் கடுமை​யாகத் தாக்​கப்​பட்​டனர்.

இந்​தச் சம்​பவம் தொடர்​பான சிசிடிவி காட்​சிகள் சமூக வலைதளங்​களில் வெளி​யான நிலை​யில், ஆகாஷ்டெல்​சன், குணா ஆகியோரை மானாமதுரை போலீ​ஸார் கைது செய்​தனர். அப்​போது போலீ​ஸாரிடம் இருந்துதப்​பியோட முயன்ற ஆகாஷ் டெல்​சனின் காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்து சிவகங்கை அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்ட அவர் மேல்​சிகிச்​சைக்​காக மதுரை அரசு ராஜாஜி மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தார்.

இந்​நிலை​யில், ஆகாஷ் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்​டும், குடும்​பத்​துக்கு ரூ.50 லட்​சம் இழப்​பீடு வழங்க வேண்​டும் எனக் கோரி ஆகாஷின் தந்தை ராஜேஷ்கண்​ணன் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத்தாக்​கல் செய்தார்.

அந்த மனு​வில், ஆகாஷின் உடலை முழு​வது​மாக எக்​ஸ்ரே செய்து டீன் மேற்​பார்​வை​யில் உடற்​கூ​ராய்வு செய்​ய​வும், அதை முழு​மை​யாக வீடியோ​வில் பதிவு செய்​ய​வும், ஆகாஷ் டெல்சனின் மரணத்தை காவல் மரணம் என அறி​வித்து போலீ​ஸார் மீது எஸ்​சி, எஸ்டி வன்​கொடுமைச் சட்​டத்​தில் வழக்​குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்றும் அதில் கூறப்​பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஆர்​.​விஜயகு​மார் விசா​ரித்​தார். அப்​போது அரசுத் தரப்​பில் தெரிவிக்​கும்​போது, மேலப்​பசலை ரயில் நிலை​யப் பகு​தி​யில் ஆகாஷ்டெல்சன் கைது செய்​யப்​பட்​டார். தப்​பியோட முயன்​ற​போது கீழே விழுந்​த​தில் காயமடைந்​தார்.

7-ம் தேதி 10 மணிக்கு காயம் காரண​மாக அவரால் நகர முடி​யாத நிலை உரு​வான​தால், நீதித்​துறை நடு​வர், அரசு மருத்​து​வ​மனை​யில் சந்​தித்து காவலில் வைக்க உத்​தர​விட்​டார். அவருக்கு மூச்​சு​விட சிரமம் ஏற்​பட்​ட​தால் உயர் சிகிச்​சைக்​காக மதுரை அரசு மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டார்.

அப்​போது அவரது உடல்​நிலை சீராகவே இருந்​தது. அவரைச் சந்​தித்​துப்​பேச அவரது தாயாருக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டது. அவர் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் செல்​லப்​பட​வில்​லை.

அப்​படி​யிருக்​கும்​போது அவரை எப்​படி போலீஸ் காவலில் வைத்து தாக்​கி​யிருக்க முடி​யும். இது காவல் மரணம் அல்ல என வாதிடப்​பட்​டது.

பின்​னர் நீதிப​தி, ஆகாஷூக்கு என்ன காயம் ஏற்​பட்டது எனக்கேட்டார்.

அதற்கு அரசுத் தரப்​பில், போலீ​ஸில் பிடிப​டா​மல் இருக்க தப்​பியோடிய​போது காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது எனக் கூறப்​பட்​டது.இதைத் தொடர்ந்து நீதிப​தி, 26 வயது இளைஞர் எலும்பு முறி​வால் உயி​ரிழந்​தாரா அப்​படி என்​றால் அதுகுறித்து விசா​ரிக்க வேண்​டும் தானே என்​றார்.

அரசுத் தரப்​பில், ஆகாஷ் மரணம் தொடர்​பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்டு விசா​ரணை அதி​காரி நியமிக்​கப்​பட்​டுள்​ளார். உடற்​கூ​ராய்வை வீடியோ பதிவு செய்​ய​வும், மானாமதுரை காவல் நிலைய சிசிடிவி காட்​சிகளைப் பாது​காக்​க​வும் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனக் கூறப்​பட்​டது.

இவற்​றைப் பதிவு செய்​து​கொண்ட நீதிப​தி, நீதி​மன்​றத்​தின் கோரிக்​கைகளை அரசுத் தரப்பு ஏற்​றுக்​கொண்​டுள்​ளது. சில கோரிக்​கைகள், வழக்​குத் தொடர்​வதற்கு முன்பே ஏற்​கப்​பட்​டுள்​ளது.

எனவே மனு​தா​ரர்தரப்​பு, பொது​மக்​களுக்கு சிரமம் ஏற்​படும் வகை​யில் நடத்​தப்​பட்டு வரும் சாலைமறியல் போராட்​டத்​தைக் கைவிட்டு கலைந்து செல்லவேண்​டும். இதைப் போராட்​டத்​தில் ஈடு​படு​வோரிடம் மனு​தா​ரர் அறி​வுறுத்த வேண்​டும் என்​றார்.

இதற்கு மனு​தா​ரர் தரப்​பில் உறுதி அளிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, விரை​வில் உடற்​கூ​ராய்வு செய்து உடலை உறவினர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும். விசா​ரணை மார்ச் 11-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது என நீதிபதி உத்​தர​விட்​டார்.

இதனிடையே மானாமதுரை பகு​தி​யில் போலீ​ஸாரின் கட்​டுப்​பாட்​டில் இருந்த இளைஞர் உயி​ரிழந்த சம்​பவத்​தில், முழு​மை​யான மற்​றும் வெளிப்​படை​யான விசா​ரணையை நடத்த தமிழக வாழ்​வுரிமைக்​கட்சி தலை​வர் தி.வேல்​முரு​கன் வலி​யுறுத்​தி​யுள்​ளார். மேலும் பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​துக்கு நிவாரண​மும் பாது​காப்​பும் வழங்கவும் அவர் கேட்டுக்​கொண்​டுள்​ளார்.

இளைஞர் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 10 மார்ச் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in