கழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை நிர்பந்தித்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி மாவட்​டத்​தில் அரசு பள்ளி மாண​வர்​களைக் கொண்டு கழி​வறையை சுத்​தம் செய்​தது குறித்​து, கல்​வித்​துறை அதி​காரி​கள் விசா​ரணை மேற்​கொண்​டுள்​ளனர்.

கருங்​கல் அருகே செல்​லங்​கோணம் அரசு தொடக்​கப்​பள்​ளி​யில் 5-ம் வகுப்பு மாண​வர்களைக் கொண்​டு, தலைமை ஆசிரியை தனது கால்​களை மசாஜ் செய்ய கட்​டாயப்​படுத்​தி​ய​தாக​வும், கழி​வறையை சுத்​தம் செய்ய வைத்​த​தாக​வும் புகார் எழுந்​தது.

இதுபற்றி தெரியவந்த பாதிக்​கப்​பட்ட மாண​வர்​களின் பெற்​றோர், சம்​பந்​தப்​பட்ட தலைமை ஆசிரியை​யிடம் கேள்வி எழுப்​பினர். அதற்கு அந்த ஆசிரியை முன்​னுக்​குப் பின் முரணான பதில்​களைக் கூறு​வதும், பின்​னர் அவர் வருத்​தம் தெரி​விப்​பதும் தொடர்​பான வீடியோ, சமூக வலை​தளங்​களில் பரவியது.

இதுதொடர்​பாக பெற்​றோர் ஒன்​றிணைந்​து, பள்ளி கல்​வித்​துறைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்​பி​யுள்​ளனர். இதை யடுத்து மாவட்ட கல்வி அதி​காரி​கள் நேற்​று, செல்​லக்​கோணம் அரசு தொடக்​கப் பள்​ளிக்குச் சென்று விசா​ரணை நடத்​தினர். புகார் நிரூபிக்​கப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்​கப்​படும் என கல்​வித்​ துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
உதயநிதி Vs நிர்மல் குமார்: பேரவையில் வார்த்தைப் போரால் பரபரப்பு - தவெக, திமுக உறுப்பினர்கள் கூச்சல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in