திண்டுக்கல் அருகே பால் வேன் மோதியதில் 4 சிறுமிகள் உயிரிழப்பு

திண்டுக்கல் அருகே பால் வேன் மோதியதில் 4 சிறுமிகள் உயிரிழப்பு
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ஆடுமேய்க்க உறவினருடன் சென்ற சிறுமிகள் நான்கு சிறுமிகள் பால் வேன் மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதில் இருவர் சகோதரிகள் ஆவர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த, பழனிச்சாமி மனைவி அஞ்சம்மாள்(60). இவர், கணவாய் மேடு பகுதியில் சாலையோரம ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். இவரது உறவினரின் குழந்தைகள் அவருடன் சென்று சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது அடுத்தடுத்து மோதியது. இதில், நாகராஜ் மகள்கள் ​யோகவர்ஷினி (11), அனன்யா (6) (இருவரும் சகோதரிகள்), ஜெகதீசன் மகள் தனுஸ்ரீ (5), சின்னதம்பி மகள் ​மோசிகரன் (6) ஆகிய நான்கு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இதைக் கண்ட ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். ​விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடமதுரை போலீஸார் நான்கு சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுனரை போலீஸார் தேடிவருகின்றனர். ஒரே விபத்தில் சகோதரிகள் உள்ளிட்ட நான்கு சிறுமிகள் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே பால் வேன் மோதியதில் 4 சிறுமிகள் உயிரிழப்பு
“அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைவது அவசியம்” - ஈரான் உச்ச தலைவர் வலியுறுத்தல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in