ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு 2 ஆண்டுகள் தாமதமாக பதில்: கல்வியியல் பல்கலை.க்கு அபராதம்

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு 2 ஆண்டுகள் தாமதமாக பதில்: கல்வியியல் பல்கலை.க்கு அபராதம்
Updated on
1 min read

சென்னை: தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் கோரப்​பட்ட தகவலுக்கு 2 ஆண்​டு​கள் கால தாமத​மாக பதிலளித்த ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தரு​மபுரி மாவட்​டத்​தைச் சேர்ந்த பரத்​வாஜ் என்ற மாணவர் தனி​யார் ஆசிரியர் கல்​வி​யியல் கல்​லூரி​யில் கடந்த 2022 மார்ச் மாதம் நடந்த தேர்​வில் பங்​கேற்று எழு​தி​யுள்​ளார். ஆனால் குறிப்​பிட்ட ஒரு தேர்​வில் அவர் பங்​கேற்​க​வில்லை எனக்​கூறி அவருடைய சான்​றிதழ் திருப்பி வழங்​கப்​பட​வில்​லை.

அதையடுத்து அந்த தேர்​வில் தான் பங்​கேற்று எழு​தி​ய​தாக​வும், எனவே தனது சான்​றிதழ்​களை திருப்பி வழங்க வேண்​டுமென்​றும், இது தொடர்​பாக உரிய விளக்​கம் அளிக்​கக் கோரி​யும் பரத்​வாஜ் தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் தமிழ்​நாடு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழகத்​துக்கு விண்​ணப்​பித்​திருந்​தார்.

ஆனால் தனது விண்​ணப்​பம் மீது 2 ஆண்​டு​களாக எந்த தகவலும் அளிக்​கப்​பட​வில்லை எனக்​கூறி பரத்​வாஜ் மாநில தகவல் ஆணை​யத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அதில், ‘தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் கீழ் கேட்​கப்​படும் கேள்வி​களுக்​கும், விளக்​கங்​களுக்​கும் 30 நாட்​களுக்​குள் பதிலளிக்க வேண்​டும்.

ஆனால் தனது மனு மீது 2 ஆண்​டு​களாக எந்த பதி​லும் வழங்​கப்​பட​வில்லை என்​ப​தால் ஏற்​பட்ட மன உளைச்​சலுக்கு உரிய இழப்​பீடு வழங்​க​வும், தனது கல்வி சான்​றிதழ்​களை விடு​வி்க்​க​வும் உத்​தர​விட வேண்​டும்’ எனக் கோரி​யிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை மாநில தகவல் ஆணை​யர் ஆர்.பிரி​யாகு​மார் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக பொது தகவல் அலு​வலர் நேரில் ஆஜராகி, மனு​தா​ரர் அளித்த விண்​ணப்​பம் தங்​களுக்கு கிடைக்​க​வில்​லை.

மாநில தகவல் ஆணை​யம் அனுப்​பிய சம்​மன் அடிப்​படை​யில் மனு​தா​ரர் கோரிய தகவல்​கள் அவருக்கு வழங்​கப்​பட்டு விட்​ட​தாக தெரி​வித்​தார். அந்த விளக்​கத்தை ஏற்க மறுத்த மாநில தகவல் ஆணை​யர், ``தகவல் அறி​யும் உரிமைச் சட்​டத்​தின் நோக்​கமே தகவல்​கள் எந்த ஒளிவு, மறைவுமின்றி வெளிப்​படைத் தன்​மை​யுடன் மனு​தா​ரர்​களுக்கு 30 நாட்​களுக்​குள் கிடைக்க வேண்​டுமென்​பது​தான்.

ஆனால் மனு​தா​ரர் கோரிய மனுவுக்கு 2 ஆண்​டு​கள் கழித்து பதிலளிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே மனு​தா​ரருக்கு ஏற்​பட்ட பாதிப்​புக்கு ஆசிரியர் கல்​வி​யியல் பல்​கலைக்​கழக நிர்​வாகம் ரூ.10 ஆயிரத்தை 20 நாட்​களுக்​குள் இழப்​பீ​டாக வழங்க வேண்​டும்.

அத்​துடன் ஆசிரியர் பயிற்சி மாணவர் பரத்​வாஜின் கல்வி சான்​றிதழ்​களை ஒரு வார காலத்​துக்​குள் திருப்பி கொடுக்க வேண்​டும். இழப்​பீடு மற்​றும் சான்​றிதழ் வழங்​கியது தொடர்​பாக பல்​கலைக்​கழக நிர்​வாகம் மே 22-க்​குள் அறிக்கை தாக்​கல்​ செய்​ய வேண்​டும்​'' என உத்​தர​விட்​டுள்​ளார்​.

ஆர்டிஐ சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு 2 ஆண்டுகள் தாமதமாக பதில்: கல்வியியல் பல்கலை.க்கு அபராதம்
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்; விதிகளை வகுக்க கோரி வழக்கு: 8 வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in