உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பகிர்வு குறித்து டிசம்பருக்குள் தமிழக அரசிடம் பரிந்துரை தாக்கல்

மாநில நிதி ஆணையத் தலைவர் தகவல்
உள்ளாட்சி நிர்வாகம், நிதி நிலையை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில நிதி ஆணைய தலைவர் அலாவுதீன்,  அரசுத் துறைச் செயலர்கள் ககன்தீப் சிங் பேடி, தர்மேந்திர பிரதாப் யாதவ், தேசிய பொது நிதி, கொள்கை நிறுவன முன்னாள் இயக்குநர் கோவிந்தராவ், கேரள முன்னாள் தலைமைச் செயலர் விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

உள்ளாட்சி நிர்வாகம், நிதி நிலையை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில நிதி ஆணைய தலைவர் அலாவுதீன், அரசுத் துறைச் செயலர்கள் ககன்தீப் சிங் பேடி, தர்மேந்திர பிரதாப் யாதவ், தேசிய பொது நிதி, கொள்கை நிறுவன முன்னாள் இயக்குநர் கோவிந்தராவ், கேரள முன்னாள் தலைமைச் செயலர் விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை: உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான நிதிப் பகிர்வு தொடர்​பான பரிந்​துரை டிசம்​பர் மாதத்​துக்​குள் தமிழக அரசிடம் சமர்ப்​பிக்​கப்​படும் என மாநில நிதி ஆணை​யத்​தின் தலை​வர் அலா​வுதீன் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக அரசின் 7-வது மாநில நிதி ஆணை​யம் மற்​றும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறு​வனம் சார்​பில் உள்​ளாட்சி அமைப்​பு​களின் நிர்​வாகம் மற்​றும் நிதி நிலையை மேம்​படுத்​துதல் தொடர்​பான தேசிய அளவி​லான கருத்​தரங்​கம் அரும்​பாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

ஆணை​யத்​தின் தலை​வர் கே.அலா​வுதீன் தலை​மை​யில் நடந்த கருத்​தரங்​கில், நகராட்சி நிர்​வாகத்​துறை செயலர் ககன்​தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்​சித் துறை செயலர் தர்​மேந்​திர பிர​தாப் யாதவ், தேசிய பொது நிதி மற்​றும் கொள்கை நிறு​வனத்​தின் முன்​னாள் இயக்​குநர் எம்​.கோ​விந்த ராவ், கேரள முன்​னாள் தலை​மைச் செயலர் எஸ்​.எம்​.​விஜ​யானந்த் உள்​ளிட்​டோர் பங்​கேற்று கருத்​துக்​களை முன்​வைத்​தனர்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கே.அலா​வுதீன் கூறிய​தாவது: தமிழகத்​தில் நகராட்​சி, மாநக​ராட்சி மற்​றும் கிராம ஊராட்​சிகள் உள்​ளிட்ட உள்​ளாட்சி அமைப்​பு​களுக்​கான 7-வது மாநில நிதி ஆணை​யம் அமைக்​கப்​பட்டு ஓராண்டு நிறைவடைந்​துள்​ளது.

மாநில அரசின் நிதியி​லிருந்து உள்​ளாட்சி அமைப்​பு​களுக்கு எந்த அளவுக்கு நிதிப் பகிர்வு அளிக்​கப்பட வேண்​டும், உள்​ளாட்சி அமைப்​பு​கள் தங்​களின் சொந்த நிதி ஆதா​ரங்​களை எவ்​வாறு பெருக்கிக் கொள்​வது மற்​றும் பொது​மக்​களுக்​கான சேவை வழங்​கும் திறனை எவ்​வாறு மேம்​படுத்​து​வது ஆகிய 3 முக்​கிய அம்​சங்​கள் குறித்து ஆய்வு செய்து வரு​கிறோம்.

இதுதொடர்​பாக பல்​வேறு மாவட்​டங்​களில் அதி​காரி​களு​ட​னும், மக்​கள் பிர​தி​நி​தி​களு​ட​னும் விரி​வான ஆலோ​சனை​கள் நடத்​தப்​பட்​டுள்​ளன. மேலும் கேரளா, கர்​நாடகா உள்​ளிட்ட பிற மாநிலங்​களின் உள்​ளாட்சி நிர்​வாக நடை​முறை​கள் குறித்​தும் ஆராய்ந்து வரு​கிறோம்.

இதன் தொடர்ச்​சி​யாக தற்​போது நடை​பெற்று வரும் இக்​கருத்​தரங்​கில் பெறப்​படும் ஆலோ​சனை​களை​யும் உள்​வாங்​கி, டிசம்​பருக்​குள் பரிந்​துரை அறிக்கை அரசிடம் சமர்ப்​பிக்​கப்​படும். இவ்​வாறு அவர் கூறி​னார். இந்த ​நிகழ்​வில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறு​வன இயக்​குநர் எம்​.சுரேஷ் பாபு, ஆணை​யத்​தின் இணை செயலர் வி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>உள்ளாட்சி நிர்வாகம், நிதி நிலையை மேம்படுத்துதல் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் மாநில நிதி ஆணைய தலைவர் அலாவுதீன்,  அரசுத் துறைச் செயலர்கள் ககன்தீப் சிங் பேடி, தர்மேந்திர பிரதாப் யாதவ், தேசிய பொது நிதி, கொள்கை நிறுவன முன்னாள் இயக்குநர் கோவிந்தராவ், கேரள முன்னாள் தலைமைச் செயலர் விஜயானந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: ம.பிரபு</p></div>
எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in