பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறது: முழுமையாக ரத்து செய்ய தலைவர்கள், விவசாயிகள் கோரிக்கை

பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறது: முழுமையாக ரத்து செய்ய தலைவர்கள், விவசாயிகள் கோரிக்கை
Updated on
1 min read

தஞ்சாவூர்: தேர்​தல் வாக்​குறு​தி​யில் அறி​வித்​தபடி, பயிர்​கடன் தள்​ளு​படி வழங்க வேண்​டும் என அரசி​யல் கட்​சி​யினர், விவ​சா​யிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: ரூ. 75 ஆயிரம் வரை கடன் பெற்​றவர்​களுக்கு மட்​டும் முழு கடன் தள்​ளு​படி, மற்ற விவ​சா​யிகள் அனை​வருக்​கும் ரூ.35 ஆயிரம் வரை தள்​ளு​படி என்ற அறி​விப்பு சரித்​திரத்​திலேயே இல்​லாத ஒன்​றாகும். பயி​ரிடப்​படும் பயிர்​களுக்கு ஏற்​றார்​போல் கடன் அளவும் வேறு​படும் என்​பதை தவெக அரசு உணர​வில்​லை. தேர்​தல் அறிக்​கை​யில் வாக்​குறுதி அளித்​த​வாறு குறு, சிறு விவ​சா​யிகள் கூட்​டுறவு வங்​கி​களில் வாங்​கி​யுள்ள பயிர்க் கடன்​கள் முற்​றி​லு​மாக தள்​ளு​படி செய்​யப்பட வேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: தேர்​தலின்​போது கொடுத்த வாக்​குறு​தி​யின்​படி 5 ஏக்​கருக்​கும் குறை​வாக நிலம் வைத்​துள்​ளவர்​களின் பயிர்க்​கடனை முழு​மை​யாக ரத்து செய்​யாமல் ரூ.50,000, ரூ.75,000 என கந்து வட்​டிக்​காரர்​போல கடன் வரம்பை கொஞ்​சம் கொஞ்​ச​மாக உயர்த்​து​வது கடும் கண்​டனத்​துக்​குரியது.

பாமக தலை​வர் அன்​புமணி: கூட்​டுறவு வங்​கி​களில் சிறு மற்​றும் குறு விவ​சா​யிகள் வாங்​கிய கடனின் அளவு திரும்ப செலுத்த முடி​யாத அளவுக்கு அதி​கரித்​துள்ள நிலை​யில், அவற்றை முழு​மை​யாக தள்​ளு​படி செய்​தால் மட்​டும் தான் அவர்​களுக்கு பயன் கிடைக்​கும்.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன்: இந்த அறி​விப்பு தேர்​தல் வாக்​குறு​திக்கு முற்​றி​லும் முரணான​தாகும். “மாற்​றம்” கொண்டு வரு​வ​தாக முதல்​வர் விஜய் சொன்ன வார்த்​தைக்கு அர்த்​தம் என்ன? ஐஜேகே தலை​வர் ரவி பச்​ச​முத்​து: விவ​சா​யிகளின் தற்​போதைய சூழ்​நிலைகளைக் கருத்​தில்​கொண்​டு, தமிழக அரசு பயிர்​கடன்​களை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

காவிரி டெல்டா பாசன விவ​சாய சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் கே.வீ.இளங்​கீரன்: பயிர்க்​கடன் அறி​விப்பு கடல் நீரில் பெருங்​கா​யத்தை கரைப்​பது போன்ற செய​லாகும். தமிழக முதல்​வரின் கடன் தள்​ளு​படி அறி​விப்​பும் ஏமாற்​றும் வகை​யில் உள்​ளது. இதனால் விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொள்​ளும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. எனவே வாக்​குறு​திப்​படி கடன் முழு​மை​யும் தள்​ளு​படி செய்ய வேண்​டும்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் சாமி.நட​ராஜன்: முழுமையாக தள்ளுபடி கோரிக்​கையை வலி​யுறுத்தி சென்​னை​யில் மாநில கூட்​டுறவு பதி​வாளர் அலு​வல​கம் முன்பு தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கம் சார்​பில் ஜுன் 22-ம் தேதி தொடர் முழக்​கப் போராட்​டம் நடத்​தப்​படும்.

தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க பொதுச் செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி: தமிழக அரசு தற்​போது உயர்த்தி அறி​வித்​துள்ள கடன் தள்​ளு​படி அறி​விப்பு விவ​சா​யிகளுக்கு பெருத்த ஏமாற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. இந்​தச் சலுகை​ போதாது. இதே​போல, முதல்​வரின் அறி​விப்பு ஏமாற்​றம் அளிப்​ப​தாக

தமிழக நலிவுற்ற விவ​சா​யிகள் சங்க மாநிலத் தலை​வர்​. கே.எஸ்​.​முகமது இப்​ராஹிம், விவ​சா​யிகள் சங்க நிர்​வாகி​கள் சுவாமிமலை சுந்​தர​விமல்​நாதன், கணப​தி​யக்​ரஹாரம் சீனி​வாசன், நெய்​குப்பை கலைமணி ஆகியோ​ரும் கருத்து தெரி​வித்​துள்​ளனர்​.

பயிர்க்கடன் தள்ளுபடி மீண்டும் ஏமாற்றம் அளிக்கிறது: முழுமையாக ரத்து செய்ய தலைவர்கள், விவசாயிகள் கோரிக்கை
‘வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை!’ - தங்கம் தென்னரசு விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in