“பேரவையில் மக்கள் பிரச்சினைகளை புறந்தள்ளி சொந்த பிரச்சினைகளை பேசுகின்றனர” - பழனிசாமி விமர்சனம்

தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

Updated on
1 min read

தரு​மபுரி: ஆளும் கட்​சி​யும் எதிர்க்​கட்​சி​யும் மக்​கள் பிரச்​சினை​களுக்கு பதிலாக சட்​டப் பேர​வை​யில் தங்​கள் சொந்த பிரச்​சினை​களைத் தான் பேசுகின்றன என அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி விமர்​சித்​துள்​ளார்.

தரு​மபுரி மாவட்​டத்​தில் பல்​வேறு கட்​சிகளைச் சேர்ந்​தவர்​கள் அதிமுக​வில் இணை​யும் நிகழ்ச்சி தரு​மபுரியில் நேற்று நடந்​தது மாவட்ட செய​லா​ளர்​கள் அசோகன், டி.ஆர்​.அன்​பழகன் ஆகியோர் தலை​மை​யில் நடந்த இந்​நிகழ்ச்​சி​யில் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உறுப்​பினர் அட்​டைகளை வழங்கி பேசி​ய​தாவது: ஏழை மாணவ, மாண​வியரின் மருத்​து​வக் கல்வி கனவை நனவாக்​கும் வகை​யில் அதி​முக ஆட்​சி​யில் தான் 7.5 சதவீதம் சிறப்பு இடஒதுக்​கீடு அமல்​படுத்​தப்​பட்​டது. விவ​சாயிகளின் ரூ.12,110 கோடி பயிர்க் கடன்​களை தள்​ளு​படி செய்​ததும் அதி​முக அரசு தான்.

இன்று தவெக ஆட்​சிக்கு வந்​திருப்​பது விபத்​து. இந்த அரசு ஒரு மாதத்​தில் ரூ.28 ஆயிரம் கோடி கடன் பெற்​றுள்​ளது. இந்தக் கடனை மக்​கள் தான் சுமக்க வேண்​டும். அதி​முக ஆட்​சிக் காலத்​தில் தேவைக்கு மட்​டுமே கடன் வாங்​கப்​பட்​டது.பல்​வேறு வளர்ச்​சித் திட்​டங்​களை கொண்டு வந்​தது.

இன்​றைய அமைச்​சர்​களில் 3 பேருக்கு மட்​டும் தான் பதில் அளிக்​கத் தெரி​கிறது. 100 நாளை ஓட்​டி​விட்ட இந்த அரசு மக்​களுக்கு என்ன செய்​துள்​ளது, ஆளும் கட்​சி​யும், எதிர்க்கட்​சி​யும் தங்​கள் சொந்​தப் பிரச்​சினை​களைத் தான் சட்​டப்பேர​வை​யில் பேசி வரு​கின்​றன. மக்​கள் பிரச்​சினை​களை பற்றி பேசும் ஒரே

கட்சி அதி​முக மட்​டும்தான். (இவ்வாறு பேசிக்​கொண்​டிருந்த போதே மின்​சா​ரம் தடைபட்டு ஜெனரேட்​டர் மூலம் மின்​சா​ரம் வழங்​கப்​பட்​டது) இது​தான் இன்​றைய ஆட்​சி​யின் லட்​சணம். இவ்​வாறு பேசி​னார்.

இந்​நிகழ்ச்​சி​யில், அதி​முக துணைப் பொதுச் செய​லா​ளர் கே.பி.​முனு​சாமி, டி.கே.​ராஜேந்​திரன், எம்​எல்ஏ சம்​பத்​கு​மார் உள்​ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

<div class="paragraphs"><p>தருமபுரியில் நடந்த நிகழ்ச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி முன்னிலையில் பல்வேறு கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.</p></div>
பெரியார், அம்பேத்கருக்கு விஜய் அரசால் மிகப் பெரிய அவமரியாதை: திமுக காட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in