“தூர சக்தியை காக்க பேர சக்தி முயற்சியா?” - ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் இபிஎஸ் கேள்வி

“தூர சக்தியை காக்க பேர சக்தி முயற்சியா?” - ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் இபிஎஸ் கேள்வி
Updated on
1 min read

சென்னை: “தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மின்துறை தலைமை அலுவலகத்தில் முக்கிய விவரங்கள் அடங்கிய 18 ஹார்டு டிஸ்குகள் காணவில்லை என செய்திகள் வருகின்றன.

தூயசக்தி என்று சொல்லிக்கொள்ளும் ஆட்சியில் டெண்டர் தொடர்பான தரவுகள் காணாமல் போயிருப்பதை என்னவென்று எடுத்துக்கொள்ள வேண்டும்?

நடு இரவில் திருடர்கள் வந்து திருட, இது என்ன மந்தையில் இருக்கும் ஆடா? கண்டிப்பாக, இந்த திருட்டில் ஏதோ ஒரு உள்நோக்கம், யாரையோ காப்பாற்றும் சதி இருக்கிறது என உறுதியாக சொல்லலாம்.

தூர சக்தி, ஓர சக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேர சக்தி?

ஹார்டு டிஸ்குகள் திருட்டு குறித்து முறையான சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிவர வேண்டும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தூர சக்தியை காக்க பேர சக்தி முயற்சியா?” - ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் இபிஎஸ் கேள்வி
மின்துறை ஹார்டு டிஸ்குகள் திருடுபோன விவகாரம்: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
“தூர சக்தியை காக்க பேர சக்தி முயற்சியா?” - ஹார்டு டிஸ்க் விவகாரத்தில் இபிஎஸ் கேள்வி
“மின்வெட்டுக்கு தீர்வு காணாமல் பிரச்சினையை திசை திருப்புகிறார்கள்” - செந்தில் பாலாஜி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in