“நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என தீர்மானிப்பது எதிரிகளே” - திமுக குற்றச்சாட்டுக்கு பழனிசாமி பதில்

“நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என தீர்மானிப்பது எதிரிகளே” - திமுக குற்றச்சாட்டுக்கு பழனிசாமி பதில்
Updated on
2 min read

அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி அவதூறாக பேசுவ​தாக திமுக​வினர் குற்​றம்​சாட்​டிய நிலை​யில், “நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்​டும் என்று எதிரி​களே தீர்​மானிக்​கி​றார்​கள்” என்று பழனிசாமி பதில் அளித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி நேற்று சென்னை சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​தி​யில் அதி​முக வேட்​பாளர் ஆதி​ராஜா​ராமை ஆதரித்து கட்சியின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது:

இது துணை முதல்​வர் உதயநிதி தொகு​தி, அவர் எம்​எல்ஏ ஆவதற்கு முன்பு கொடுத்த வாக்​குறுதி நிறை​வேற்​றி​னா​ரா? கழிப்​பறை வசதி செய்து கொடுப்​ப​தாகச் சொன்​னார், செய்​தா​ரா? 525 வாக்​குறு​தி​கள் கொடுத்த திமுக அவற்​றில் நான்​கில் ஒரு பங்கு கூட நிறை​வேற்​ற​வில்​லை. கல்விக் கடன் ரத்து செய்​வ​தாகச் சொல்லி செய்​ய​வில்​லை, நீட் தேர்​வுக்கு ரகசி​யம் இருக்​கிறது என்​றார். ‘தங்​கமலை ரகசி​யம்’ என்ற படம் இருக்​கிறது, நீட் ரகசி​யத்தை வெளி​யிட்​டால், அந்த கதை மாதிரி ஆகி​விடும் என்று பயப்​படு​கி​றார் உதயநி​தி.

இன்​று​வரை நீட்​டுக்கு விலக்கு பெற வேண்​டும் என்​பது​தான் அதி​முக​வின் நிலைப்​பாடு. காங்​கிரஸ் தலை​வரின் மனைவி நீட் தேர்​வுக்கு ஆதர​வாக வாதாடி​னார். செஞ்​சதெல்​லாம் காங்​கிரஸ். ஆனால், திமுக நம் மீது பழி போடு​வதை ஏற்​றுக்​கொள்ள முடி​யு​மா? இது​தான் ஸ்டா​லினின் இரட்டை வேடம்.

திமுக ஆட்​சி​யில் 18 ஆயிரம் பாலியல் வழக்​குகள் பதி​வானது. அதில் 6999 சிறுமிகளுக்கு எதி​ரான போக்சோ வழக்​கு​கள் என்று சமூகநலத்​துறை அமைச்​சரே சொல்​கி​றார். இந்த ஆட்சி நல்​லாட்​சி​யா? சிறுமிகளுக்கு பாது​காப்பு இருக்​கிற​தா? இப்​படி ஆட்​சியை வைத்​துக்​கொண்டு பெண்​கள் பாது​காப்​பாக இருக்​கி​றார்​கள் என்​கி​றார்.

கரோனா காலத்​தில் மக்​கள் பாதிக்​கப்​பட்ட நேரத்​தில் ஸ்டா​லின் சரி​யான ஆலோ​சனை கொடுக்​க​வில்​லை. அப்​போது எங்கே காணா​மல் போனீர்​கள் என்று கேட்​டேன். அதற்கு புலம்​பு​கி​றார். காணா​மல் போனார் என்​று​தான் பேசினேனே ஒழிய, தவறாகப் பேச​வில்​லை. அப்​படி பேசவேண்​டிய அவசி​யமில்​லை. ஆனால் நீங்​களும், உதயநி​தி​யும் எப்​படி கேவல​மாகப் பேசினீர்​கள், காலுக்​குள் இருக்​கிறேன் என்று சொன்​னீர்​கள், இதை ஏற்​றுக்​கொள்ள முடி​யு​மா? நீங்​கள் ஒரு வார்த்தை பேசி​னால் 10 வார்த்தை திருப்பி பேச முடி​யும். நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்​டும் என்று தீர்​மானிப்​பது நானல்ல, எதிரி​கள் தான். 51 ஆண்​டு​கால அரசி​யல் வாழ்​வில் நான் யாரை​யும் தவறாக விமர்​சிக்​க​வில்​லை. என்னை அவதூறாகப் பேசி​னால் வேடிக்கை பார்க்க மாட்​டேன். உடனுக்​குடன் தகுந்த பதிலடி கொடுப்​பேன்.

கரோனா காலத்​தில் 32 மாவட்​டங்​களுக்கு நேரடி​யாகச் சென்று அதி​காரி​களை அழைத்​து, வியா​பாரி​கள், விவ​சா​யிகள், தொழி​லா​ளர்​களை அழைத்து கருத்​துகளைக் கேட்​டேன், உயிரைப் பற்றி கவலைப்​பட​வில்​லை, மக்​களை பற்றி கவலைப்​பட்​டேன். உங்​களைப்​போல போட்டோ ஷூட் போட்டு விளம்​பரம் தேட​வில்​லை. அதனால் அதி​முக ஆட்சி பொற்​கால ஆட்​சி.

கனமழை பெய்​தால் ஒரு சொட்டு நீர் கூட தேங்​காது என்​றார் உதயநி​தி. அப்​படியா இருக்​கிறது? கருணாநிதி குடும்​பத்​தில் பிறந்​தால் தான் அமைச்​சர், துணை முதல்​வர் ஆக முடி​யும், கட்​சிப் பதவிக்கு வரமுடி​யும். ஸ்டா​லின் தலை​வர், உதயநிதி இளைஞரணி செய​லா​ளர், கனி​மொழி துணை பொதுச்​செய​லா​ளர், தயாநிதி மாறன் விளை​யாட்டு அணி செய​லா​ளர். எல்லா பதவி​களும் குடும்​பத்​துக்​குள் தான் இருக்​கிறது. அதி​முக​வில் சாதாரண தொண்​டன் உழைத்​தால் பொதுச்​செய​லா​ளர் ஆகலாம். மக்​களிடம் நற்​பெயர் எடுத்​தால் அவருக்கு வாய்ப்பு கொடுக்​கும் கட்சி அதி​முக.

தமி​ழ​கத்​தில் எங்கு பார்த்​தா​லும் மூலை​முடுக்​கெல்​லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடு​கிறது. போதைப் பொருள் நிறைந்த மாநில​மாக மாறி​விட்​டது தமி​ழ​கம். இதனால், மாண​வர்​கள், இளைஞர்​கள், பொது​மக்​கள் பாதிக்​கப்​படு​கின்​ற​னர். போதை ஆசாமிகளால் கொலை, கொள்​ளை, பாலியல் வன்​கொடுமை நடக்​காத நாளே இல்​லை. 2 வயது சிறுமி, பாட்​டியைக் கூட விட்​டு​வைக்​க​வில்​லை. அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் மூன்றே மாதத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும். இந்​தி​யா​வுக்கே முன் மாதிரி மாநிலம் தமிழ்​நா​டாம், ஊழல் செய்​வ​தில், கடன் வாங்​கு​வ​தில் தான் தமிழ்நாடு முதலிடத்​தில் உள்​ளது. இவ்​வாறு அவர் பேசி​னார்​.

நடுநிலையாக தேர்தல் நடத்தவே அதிகாரிகள் மாற்றம் - செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: துணை முதல்வர் உதயநிதி பேசுவதற்கு வேறு ஒன்றும் இல்லை, அரசியல் ரீதியாகப் பேசினால் பதில் சொல்லலாம். திட்டமிட்டு தனிப்பட்ட முறையில் விமர்சித்தால் அதற்கு தகுந்த பதிலடி நாங்களும் கொடுப்போம். சென்னை, திமுகவின் கோட்டை என்கிறார்கள். இனி சென்னை அதிமுகவின் கோட்டையாக மாறும்.

தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டதற்கு முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர்கள் அதிகாரிகளை நம்பித் தான் இருக்கிறார்கள். மக்களை நம்பி இல்லை. நேர்மையாக தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் விரும்புகிறார்கள். அதனடிப்படையில் மாற்றுகிறார்கள். அதில் இவர்களுக்கு என்ன கஷ்டம்? திமுக ஆட்சியில் இருந்தது அந்த அதிகாரிகள் தானே? அவர்கள் திமுக அரசுக்கு ஆதரவாக இருந்தார்கள். மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகார்கள் தேர்தல் அதிகாரிகளுக்கு போய் இருக்கிறது. அந்த அடிப்படையில் நடுநிலையோடு தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக இந்த மாற்றம் நடந்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

“நான் எந்த ஆயுதம் எடுக்க வேண்டும் என தீர்மானிப்பது எதிரிகளே” - திமுக குற்றச்சாட்டுக்கு பழனிசாமி பதில்
“விஜய்யை சந்தித்தது காங்கிரஸ் தலைமை அனுமதியுடன்தான்” - பிரவீன் சக்கரவர்த்தி புதுக் குண்டு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in