தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு கருவி செயல்பாடு முடக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு கருவி செயல்பாடு முடக்கம்
Updated on
1 min read

சென்னை: தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக, மாநகர பேருந்​துகளில் மின்​னணு பயணச்சீட்டு கரு​வி​யின் செயல்​பாடு முடங்​கியது. இதனால், யுபிஐ, சிங்​கார சென்னை அட்டை பயன்​படுத்​தும் பயணி​கள் பாதிக்​கப்​பட்​டனர்.

சென்னை மாநகரத்​தின் பொதுப் போக்​கு​வரத்து சேவை​களில், மாநகர பேருந்​துகள் முக்​கிய பங்​காற்​றுகின்​றன. புறநகர் ரயில், மெட்ரோ ஆகியவை இருந்​தா​லும் குறை​வான கட்​ட​ணம், அனைத்து இடங்​களுக்கும் சேவை, மாநகர் - புறநகர் இணைப்பு உள்​ளிட்ட அம்​சங்​கள் காரண​மாக பெரும்​பாலான மக்​கள் மாநகர பேருந்​துகளை தேர்வு செய்​கின்​றனர்.

பயணி​களுக்கான சேவைகளை மேம்​படுத்த பல்​வேறு நடவடிக்கை​களை மாநகர போக்​கு​வரத்து கழகம் மேற்கொண்டு வரு​கிறது. யுபிஐ, ஸ்மார்ட் கார்​டு, டெபிட் கார்டு மூலம் டிக்​கெட் பெறும் வகை​யில், கையடக்க மின்​னணு பயணச்​சீட்டு கருவி கடந்த 2024-ம் ஆண்டு அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

இதன்மூலம் நடத்​துநர், பயணிகள் இடையே சில்​லறை தொடர்​பான பிரச்​சினை​கள் குறைந்​தன. இந்​நிலை​யில், நேற்று காலை மாநகர பேருந்​துகளில் டிக்​கெட் வழங்​கும் மின்​னணு பயணச்​சீட்டு கருவி செயல்​பட​வில்​லை.

இதன் காரண​மாக, பழைய முறைப்​படி அச்​சிடப்​பட்ட பயணச்​சீட்​டு​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. இதனால், யுபிஐ, சிங்​கார சென்னை அட்டை பயன்​படுத்​து​வோர் பாதிக்​கப்​பட்​டனர். யுபிஐ, சிங்​கார சென்னை அட்டை ஆகியவை எப்​போதும் சரி​யாக செயல்​படு​வ​தால் கையில் சில்​லறை வைத்​திருக்​க​வில்லை என பயணி​கள் சிலர் கூறினர்.

இது குறித்​து, மாநகர போக்​கு​வரத்து கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக மின்​னணு பயணச்​சீட்டு கருவி​களின் செயல்​பாடு தற்​காலிக​மாக தடைபட்​டது.

மென்​பொருளில் நேற்​றைய கணக்​கு​கள் முடிக்​கப்​பட்​டு, அடுத்த நாளுக்​கான கணக்​கு​களு​டன் மென்​பொருள் தானாக தயா​ராகும். இந்த நடை​முறை​யில் சிக்​கல் ஏற்​பட்​ட​தால், கருவி​களை பயன்​படுத்த முடிய​வில்​லை.

எப்​போதும் அச்​சிடப்​பட்ட பயணச்​சீட்​டு​களை நாங்​கள் தயா​ராக வைத்​திருப்​போம் அதனால், பேருந்து சேவை​கள் எவ்​வித தாமத​மும் இன்றி இயக்​கப்​பட்​டது. மதி​யத்​துக்கு மேல் பிரச்​சினை சரி செயப்​பட்டு மீண்​டும் மின்​னணு கருவி​கள் பயன்​பாட்​டுக்கு வந்​தது என்றனர்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு கருவி செயல்பாடு முடக்கம்
மின்சார ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தகராறு: போதை இளைஞரை ஆர்பிஎஃப் காவலர் தாக்கிய வீடியோ வைரல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in