தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது

தொகுதியில் இருந்து வெளிநபர்கள் வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை மாநில பெண்கள் பள்ளியில், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.  படம்: எஸ்.சத்தியசீலன்

சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை மாநில பெண்கள் பள்ளியில், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. படம்: எஸ்.சத்தியசீலன்

Updated on
2 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு, தொகு​திக்கு சம்​பந்​தம் இல்​லாதவர்​கள் வெளி​யேற தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஒரே கட்​ட​மாக 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான அறி​விப்பை தேர்​தல் ஆணை​யம் கடந்த மார்ச் 15-ம் தேதி வெளி​யிட்​டது. அன்​றைய தினமே நடத்தை விதி​கள் அமலுக்கு வந்​தன. தமிழகம் முழு​வதும் பறக்​கும் படை​யினர், நிலைக் கண்​காணிப்​புக் குழு​வினர் தீவிர சோதனை நடத்தி வரு​கின்​றனர்.

தீவிர கண்காணிப்பு பணியில் இதுவரை தமிழகத்தில் மொத்தம் ரூ.1,213 கோடி மதிப்பில்லான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்​தம் 4,023 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 5.73 கோடி பேர் வாக்​களிக்க தகுதி பெற்​றுள்​ளனர். இதற்​காக 75,064 வாக்​குச்​சாவடிகள் தயார் நிலை​யில் உள்​ளன. அங்கு குடிநீர், கழி​வறை, மாற்​றுத் திற​னாளி​களுக்​கான சாய்​வுதளம் உள்​ளிட்ட வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருதால், 500-க்கும் மேற்பட்ட நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ன.

தேர்​தல் பணி​யில் 83,875 போலீ​ஸார், 40,427 அரசுஊழியர்​கள் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பாது​காப்பு பணி​யில் 300 கம்​பெனி துணை ராணுவப் படை​யினர் ஈடு​பட்டு வரு​கின்​றனர். ஒரு லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​கள், 75 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட கட்​டுப்​பாட்டு இயந்​திரங்​கள், விவி​பாட் இயந்​திரங்​கள் பயன்​படுத்​தப்பட உள்​ளன. வாக்​குப்​ப​திவு இயந்​திரங்​களில் வேட்​பாளர்​களின் பெயர், வண்​ணப் புகைப்​படம், கட்​சி​யின் சின்​னம் ஆகியவை பொருத்​தப்​பட்​டு, தேர்​தல் நடத்​தும் அதி​காரி​களின் கட்​டுப்​பாட்​டில் பாது​காப்​பாக வைக்​கப்​பட்​டுள்​ளன. இவை பலத்த பாது​காப்​புடன் நாளை (ஏப்​.22) வாக்​குச்​சாவடி வாரி​யாக அனுப்பி வைக்​கப்பட உள்​ளன.

இதற்​கிடையே, அனைத்து வேட்​பாளர்​களும் வீடு வீடாகச் சென்​றும், வாக​னத்​தில் சென்​றும், பொது​மக்​களை சந்​தித்து இறு​தி​கட்ட வாக்கு சேகரிப்​பில் தீவிர​மாக ஈடு​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், ஏற்​கெனவே அறிவிக்​கப்​பட்​டபடி, தேர்​தல் பிரச்​சா​ரம் இன்று மாலை 6 மணி​யுடன் முடிவடைகிறது.

மாலை 6 மணிக்கு பிரச்​சா​ரம் ஓய்ந்​தது முதல் வாக்​குப்​ப​திவு நாளான 23-ம் தேதி மாலை 6 மணி வரையி​லான 48 மணி நேர அமைதி காலத்​தில் அரசி​யல் கட்​சிகள் கடைபிடிக்​கவேண்​டிய வழி​காட்​டு​தல்​களை இந்​திய தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்​ளது.

அதன் விவரம்: ஏப்​.21-ம் தேதி மாலை 6 மணி முதல் 23-ம் தேதி மாலை 6 மணி வரை தேர்​தல் தொடர்​பான எந்​தவொரு பொதுக் கூட்​டத்​தையோ, ஊர்​வலத்​தையோ யாரும் ஒருங்​கிணைக்​கவோ, நடத்​தவோ, அதில் பங்​கேற்​கவோ கூடாது. தேர்​தல் தொடர்​பான விவ​காரங்​களை திரைப்​படம், தொலைக்​காட்​சி, வானொலி, குறுஞ்​செய்​தி, இணை​யம், வாட்​ஸ்​அப், முகநூல் போன்ற வலை​தளங்​கள் என எந்த வடிவி​லான தகவல் தொடர்பு மூல​மாக​வும் மக்​களின் பார்​வைக்கு கொண்​டு​செல்​லக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறை அல்​லது அபராதம் அல்​லது இரண்​டும் விதிக்​கப்​படும்.

தொகு​திக்கு வெளியே இருந்து அழைத்து வரப்​பட்ட அனைத்து அரசி​யல் கட்சி நிர்​வாகி​கள், கட்​சிப் பணி​யாளர்​கள் என தொகுதி வாக்​காளர்​கள் அல்​லாத அனை​வரும் இன்று மாலை 6 மணிக்கு தொகு​தி​யை​விட்டு வெளி​யேற வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இன்று காலை 10 மணி முதல் 23-ம் தேதி நள்​ளிரவு 12 மணி வரை டாஸ்​மாக் கடைகள், பார்​களை மூடு​மாறு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு சென்னை மாநில பெண்கள் பள்ளியில், எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.  படம்: எஸ்.சத்தியசீலன்</p></div>
“எதிரிகளால் எங்கள் வெற்றியை தள்ளிப்போட முடியும்; தடுக்க முடியாது” - காரைக்குடியில் சீமான் உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in