அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி தேவை: தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம்

அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப்படம்

அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது விசா​ரணை நடத்த அனு​ம​திக்​கும்​படி தமிழக அரசுக்கு அமலாக்​கத் துறை கடிதம் எழுதி உள்​ளது.

முன்​னாள் அமைச்​சர் அனிதா ராதாகிருஷ்ணன் வரு​மானத்​துக்கு அதி​க​மாக ரூ.2.77 கோடி சொத்து சேர்த்​த​தாக 2006-ம் ஆண்டு தமிழக லஞ்ச ஒழிப்​புத்​துறை வழக்​குப்​ப​திவு செய்​தது. இந்த வழக்​கின் அடிப்​படை​யில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றம் குறித்து கண்​டறிய 2021-ம் ஆண்டு அமலாக்​கத்​துறை விசா​ரணையை தொடங்​கியது.

இதன் தொடர்ச்​சி​யாக 2022-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் மதிப்​பிலான 18 சொத்​துகளை​யும், பின்​னர் சென்​னை, மதுரை மற்​றும் தூத்​துக்​குடி ஆகிய இடங்​களில் உள்ள ரூ.1.21 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத்​துறை முடக்​கியது.

கடந்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட போதும், அது இன்​னும் விசா​ரணைக்கு எடுத்​துக் கொள்​ளப்​பட​வில்​லை. தற்​போது அமைச்​சர்​கள் அல்​லது முன்​னாள் அமைச்​சர்​கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசின் அனு​மதி தேவை என்​ப​தால், விசா​ரணைக்கு அனு​மதி கோரி அமலாக்​கத் துறை கடந்த 20-ம் தேதி தமிழக அரசுக்கு கடிதம் அனுப்​பி​யுள்​ளது.

உச்ச நீதி​மன்​றத்​தின் 'பிர​சாத் ஆச்​சா​ரி​யா' வழக்​கின் தீர்ப்​பை​யும் இதில் அமலாக்​கத்​துறை சுட்​டிக்​காட்​டி​யுள்​ளது. ஏற்​கெனவே முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி மீது விசா​ரணை நடத்த அனு​மதி கேட்டு கடிதம் அனுப்​பப்​பட்ட நிலை​யில், 5 நாட்​களுக்கு பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் வழக்​கில் கடிதம் அனுப்​பப்​பட்​டுள்​ளது. இந்த கடிதத்​தில், “கடிதம் கிடைத்த 120 நாட்​களுக்​குள் மாநில அரசு, விசா​ரணைக்கு அனு​மதி தரவேண்​டும், தவறும் பட்​சத்​தில் அனு​மதி வழங்​கப்​பட்​ட​தாகவே கருதப்​பட்டு உரிய நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இரு கடிதங்​களும் பெறப்​பட்​டதை அரசு அதி​காரி​கள் உறுதி செய்​துள்ள நிலை​யில், தமிழக அரசு இது​வரை எந்த பதி​லும் அளிக்​க​வில்​லை. 120 நாட்​களுக்​குள் அரசு எடுக்கும் முடிவைப் பொறுத்தே அமலாக்​கத்​துறை​யின் அடுத்​தகட்ட நகர்​வு​கள் இருக்​கும்​ என எதிர்​பார்க்​கப்​படுகிறது.

<div class="paragraphs"><p>அனிதா ராதாகிருஷ்ணன் | கோப்புப்படம்</p></div>
கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை: 10 வயது சிறுமி கடத்திக் கொலை - நடந்தது என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in