காய்ச்சல், சளி, உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 211 மருந்துகள் தரமற்றவை, 5 மருந்துகள் போலி: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் உறுதி

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: மருந்து உற்​பத்தி நிறு​வனங்​கள், விற்பனையகங்​களில் மேற்​கொள்​ளப்​பட்ட ஆய்​வில், காய்ச்​சல், சளி, ஜீரண மண்டல பாதிப்பு உள்​ளிட்ட பிரச்சினை​களுக்​கான 211 மருந்​துகள் தரமற்றவையாகவும், 5 மருந்​துகள் போலி​யாக​வும் இருப்​பது கண்டறியப்பட்டுள்ளது.

நாடு ​முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து வகை​யான மாத்​திரை, மருந்​துகள் மத்​திய மற்​றும் மாநில மருந்து தரக்​கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன.

ஆய்​வின் போது தரமற்ற மற்​றும் போலி மருந்​துகள் கண்​டறியப்​பட்ட்​டால், சம்​பந்​தப்​பட்ட நிறு​வனங்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

அதன்​படி, கடந்த மாதத்​தில் மட்​டும் 1,000-க்​கும் மேற்​பட்ட மருந்து மாதிரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன. அதில், காய்ச்​சல், சளித்​தொற்​று, கிருமி தொற்​று, ஜீரண மண்டல பாதிப்பு உள்​ளிட்ட பிரச்​சினை​களுக்​கான 211 மருந்​துகள் தரமற்​றவை​யாக​வும், 5 மருந்​துகள் போலி​யாக​வும் இருப்​பது கண்​டறியப்​பட்​டது.

அதன் விவரங்​கள் மத்​திய மருந்து தரக் கட்​டுப்​பாட்டு வாரியத்​தின் https://cdsco.gov.in/ என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தயாரிக்​கப்​பட்ட கோல்ட்​ரிஃப் மருந்தை உட்​கொண்​ட​தால் மத்​தி​யப் பிரதேசத்​தில் குழந்​தைகள் உயி​ரிழந்​தனர்.

ஆனால், உற்​பத்தி நிறு​வனத்​தில் கடந்த மாதம் சோதனை நடத்​தி​யதையோ, கோல்ட்​ரிஃப் மருந்தை தரமற்​றது என வரையறைப்​படுத்​தி​யதையோ, தமிழக மருந்து கட்​டுப்​பாட்​டுத் ​துறை​யினர், மத்​திய மருந்து கட்​டுப்​பாட்டு இயக்​ககத்​துக்கு தெரிவிக்​க​வில்லை என கூறப்​படு​கிறது. அதனால்தான் தரமற்ற மருந்​துகளின் விவரங்​களை வழங்​காத மாநிலங்​களின் பட்​டியலில் தமிழகத்​தின் பெயர் இந்த மாதத்​தில்​ இடம்​ பெற்​றுள்​ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in