உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி

உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி
Updated on
1 min read

சென்னை: உயர் ரத்த அழுத்​தம், காய்ச்​சல், சளி பிரச்​சினை​களுக்​கான 198 மருந்​துகள் தரமற்​றவை​யாக​வும், போலி​யாக​வும் இருந்​தது, மத்​திய மருந்து தரக் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஆய்​வில் தெரிய​வந்​துள்​ளது.

நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் அனைத்து மாத்​திரை, மருந்​துகளை​யும் மத்​திய, மாநில மருந்து தரக் கட்​டுப்​பாட்டு வாரி​யங்​கள் மூலம் ஆய்வு செய்​யப்​படு​கின்​றன.

அப்​போது, தரமற்ற, போலி மருந்​துகள் கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட உற்​பத்தி நிறு​வனங்​கள் மீது உரிய நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது. அதன்​படி, கடந்த மாதத்​தில் மட்​டும் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்து மாதிரி​கள் ஆய்​வுக்கு உட்​படுத்​தப்​பட்​டன.

அதில், உயர் ரத்த அழுத்​தம், காய்ச்​சல், சளி, கிருமி தொற்​று, அஜீரண பிரச்​சினை​கள் உள்​ளிட்ட பாதிப்​பு​களுக்கு பயன்​படுத்​தப்​படும் 198 மருந்​துகள் தரமற்​றவை​யாக​வும், 4 மருந்​துகள் போலி​யான​தாக​வும் இருந்​தது கண்​டறியப்​பட்​டது.

அந்த விவரங்​கள், பொது​மக்​களின் விழிப்​புணர்​வுக்​காக மத்​திய மருந்து தரக் கட்​டுப்​பாட்டு வாரி​யத்​தின் https://cdsco.gov.in/ என்ற இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

சம்​பந்​தப்​பட்ட உற்​பத்தி நிறு​வனங்​களிடம் விளக்​கம் கேட்​கப்​பட்​டுள்​ளது. அதன் பின்​னர், அடுத்த கட்ட நடவடிக்​கைகள் எடுக்க மத்​திய மருந்து தரக் கட்​டுப்​பாட்டு வாரி​யம்​ முடிவு செய்துள்ளது.

உயர் ரத்த அழுத்தம், காய்ச்சல், சளி பிரச்சினைகளுக்கான 198 மருந்துகள் தரமற்றவை: மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் உறுதி
கோடை விடுமுறையில் பள்ளி குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்பதற்கு வாய்ப்பு: இந்திய - ஜப்பான் தொழில் வர்த்தக சபை ஏற்பாடு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in