வீட்டில் இருந்தே மக்கள் பத்திரப் பதிவு செய்யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடைமுறை விரைவில் அமல்

வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
வீட்டில் இருந்தே மக்கள் பத்திரப் பதிவு செய்யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடைமுறை விரைவில் அமல்
Updated on
1 min read

சென்னை: ப​திவு அலு​வல​கத்​துக்​குச் செல்​லாமல் மக்​கள் இருந்த இடத்​தில் இருந்தே ஆன்​லைனில் ஆவணங்​களை பதிவு செய்​யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடை​முறை விரை​வில் செயல்​பாட்​டுக்கு கொண்டு வரப்பட உள்​ளது.

இதுதொடர்​பாக தமிழக பதிவுத் துறைத் தலை​வர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: ஆவணப் பதிவு நடை​முறை​களை எளி​தாக்​கும் வகை​யில் மக்​கள் தாங்​களே நேரடி​யாக இணைய வழி​யில் ஆவணங்​களை பதிவு செய்​யும் முறையை பதிவுத் துறை அறி​முகம் செய்​துள்​ளது. இதன்​மூலம் மக்​கள் சார் பதி​வாளர் அலு​வல​கத்​துக்கு செல்​லாமல், எங்​கிருந்​தும், எப்​போது வேண்​டு​மா​னாலும் (24X7X365) இணை​யதளம் மூலம் இணைய வழி​யில் தங்​கள் ஆவணங்​களைப் பதிவு செய்​து​கொள்ள முடி​யும்.

ஆவணப் பதிவுக்கு சார் பதி​வாளர் ஒப்​புதல் அளித்​ததும், அவரது மின்​னணு கையொப்​பத்​துடன் கூடிய ஆவணம், சம்​பந்​தப்​பட்ட நபரின் உள்​நுழைவுக்​கும், வாட்​ஸ்​அப் எண்​ணுக்​கும் அனுப்​பப்​படும். அவர்​கள் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

என்னென்ன ஆவணங்கள் பதிவு? - ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ (Anywhere Registration) நடை​முறையை விரை​வில் செயல்​பாட்​டுக்கு கொண்​டுவர உத்​தேசிக்​கப்​பட்​டுள்​ளது. அந்த வகை​யில், முதல் விற்​பனை மனை (First sale of Plot), முதல் விற்​பனை அடுக்​கு​மாடி குடி​யிருப்பு (First sale of Flat), தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய விற்​பனை ஆவணங்​கள், வங்​கி​களில் பெறும் கடனுக்​கான அடமானம் மற்​றும் ரசீது ஆவணங்​கள் ஆகிய​வற்றை சார் பதி​வாளர் அலு​வல​கத்துக்கு வராமலேயே பதிவு செய்​ய​லாம்.

வங்​கி​கள், கட்​டு​மான நிறு​வனங்​கள், பொது​மக்​கள், ஆவண எழுத்​தர்​கள், வழக்​கறிஞர்​கள் ஆகியோர் பதிவுத் துறை இணை​யதளத்​தில் தங்​களது உள்​நுழைவை உரு​வாக்​கி, ஆவணங்​களை (ரசீது) இணை​ய​வழி​யில் சமர்ப்​பிக்​கலாம். ஆவணத்தை எழு​திக் கொடுப்​பவர்​கள், எழு​திப் பெறு​பவர்​கள், சாட்​சிகள் ஆகிய அனை​வரது ஆதார் அட்​டையை பதிவேற்​றம் செய்​ய​வேண்​டும். ஆதார் ஆணை​யம் மூலம் கைரேகை அல்​லது கரு​விழி படலம் வாயி​லாக ஆதார் சரி​பார்க்​கப்பட வேண்​டும். இதற்கு இணைய இணைப்​பு, யுஐடிஏஐ (UIDAI) ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட எல்-1 விரல் ரேகை இயந்​திரம், கரு​விழிப் படலம் கவரும் கரு​வி, புகைப்​படக் கருவி (Webcam) ஆகியவை வேண்​டும்.

ஆன்​லைன் ஆவணப் பதிவு முறை​யில் ஏதேனும் சந்​தேகம் இருந்​தால், ஹார்​டு​வேர் பிரச்​சினைக்கு முகமது யூனுஸ் (7397574067), அருண்​கு​மார் (9940446694) ஆகியோரை​யும், சாப்ட்​வேர் பிரச்​சினைக்கு சீனி​வாஸ் கணேஷ் (6369798973), டில்லி பாபு (8525805957) ஆகியோரை​யும் தொடர்​பு கொள்​ளலாம்​ என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே மக்கள் பத்திரப் பதிவு செய்யும் ‘வருகை இல்லா ஆவணப் பதிவு’ நடைமுறை விரைவில் அமல்
செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி: இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது விசாரணை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in