ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை: புதுச்சேரியில் அமைச்சர் விஸ்வநாதன் கருத்து

ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை: புதுச்சேரியில் அமைச்சர் விஸ்வநாதன் கருத்து
Updated on
1 min read

புதுச்சேரி: ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்க விரும்பவில்​லை. விரை​வில் துணைவேந்​தர்​கள் நியமிக்கப்படவுள்ளதாக உயர் கல்​வித் துறை அமைச்​சர் விஸ்வநாதன் தெரி​வித்​தார்.

அமைச்​சர்​கள் விஸ்​வ​நாதன், ராஜேஷ்கு​மார் ஆகியோர் நேற்று புதுவை காங்​கிரஸ் கட்சி தலைமை அலு​வல​கத்​துக்கு வந்​தனர். அவர்களுக்கு பாராட்டு விழா மற்​றும் நிர்​வாகி​கள் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மாநில காங்​கிரஸ் தலை​வர் வைத்​திலிங்​கம் எம்.பி, முன்​னாள் முதல்​வர் நாராயண​சாமி உள்​ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் அமைச்​சர் விஸ்​வ​நாதன் பேசும்போது, தேர்​தலுக்கு முன்பு திமுக​வுடன் கூட்​ட​ணி​யில் இருந்​தோம். தேர்​தலுக்கு முன்​பாக தவெக உடன் கூட்​ட​ணிக்கு செல்​லாமல், காங்​கிரஸில் இருந்த குள்​ளநரி​கள் குழி பறித்​தனர். தேர்​தலுக்​குப் பிறகு, காங்​கிரஸுக்கு அமைச்​சர​வை​யில் இடம் கிடைத்​துள்​ளது. லஞ்​சம் இல்​லாத மாநில​மாக விஜய் ஆட்​சி​யில் தமிழகம் உயர்ந்துள்​ளது. இந்த காம​ராஜர் பாணி தொடர்ந்​தால் 50 ஆண்​டுகளுக்கு தமிழகம் திரா​விட இயக்​கங்​கள் கையில் செல்​லாது. இவ்​வாறு பேசி​னார்.

இதே​போல் அமைச்​சர் ராஜேஷ்கு​மார் பேசும்​போது, 59 ஆண்​டுக்கு பிறகு ஆட்​சியில் பங்கு தவெக​வால் சாத்​தி​ய​மாகி​யுள்​ளது. எல்​லாக் காலக்​கட்​டத்​தி​லும் காங்​கிரஸ் தொண்​டர்களின் உழைப்​பும், வியர்​வை​யும்​தான் திமுக பலமுறை ஆட்​சி​யில் அமரக்​காரணம். தனித்து திமுக போட்​டி​யிட்டு எக்​காலத்​தி​லும் ஆட்​சியை பிடித்​தது இல்லை என்​றார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய தமிழக அமைச்​சர் விஸ்​வ​நாதன், “தமிழக நீர்வளத்​துறை அமைச்​சரிடம் பேசி புதுச்​சேரிக்கு தர வேண்​டிய நீரை பெற்​றுத் தர முயற்சி எடுப்​போம்.

திருச்​செந்தூரில் புதுச்​சேரிக்​காக விடுதி கட்ட தமிழக அரசு நிலம் தரக் கோரி​யுள்​ளனர். காவிரி கடைமடை நீரில் காரைக்​காலுக்கு 7 டிஎம்சி தர வேண்​டி​யுள்​ளது. அதுகுறித்து முதல்​வரிடம் பேசுவோம்.

புதுச்​சேரிக்கு மாநில பல்​கலைக்​கழகம் இல்​லை. தமிழகத்​தில் உலக பல்​கலைக்​கழகம் போன்று அமைக்க முதல்​வர் விஜய் திட்டமிட்டு வரு​கிறார். அதில் புது​வைக்​கான மாணவர் சேர்க்கை இருக்​கும். புதுச்​சேரி​யில் தவெக​வுடன் காங்​கிரஸ் கூட்​டணி அமைக்க முடிவு செய்​வோம்” என்​றார்.

மேலும் “கடந்த கால ஆட்​சி​யாளர்​கள் ஆளுநர் உடன் மோதல் போக்கை கடைப்​பிடித்​தனர். நாங்​கள் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்​பிடிக்க விரும்​ப​வில்​லை. ஆளுநரும், முதல்​வரும் அற்​புத​மான புரிதலுடன் பணி​யாற்​றுக்​கின்​றனர். விரை​வில் துணைவேந்​தர்​கள் நியமிக்​கப்​பட​வுள்​ளனர்” என அமைச்​சர் தெரிவித்தார்.

ஆளுநருடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை: புதுச்சேரியில் அமைச்சர் விஸ்வநாதன் கருத்து
தொழில்நுட்ப பணிகள்: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in