தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள்: ஆணையம் விசாரணை நடத்துவதாக திமுக எம்.பி. தகவல்

தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள்: ஆணையம் விசாரணை நடத்துவதாக திமுக எம்.பி. தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்​றவர்​கள் வாக்​களித்த விவ​காரம் தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக திமுக எம்​.பி வில்​சன் தகவல் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​களித்த வெளி​நாட்டு குடி​யுரிமையை பெற்ற 25 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களின் ஆள்​காட்டி விரல்​களில் தேர்​தலில் வாக்கு அளித்​ததற்​காக வைக்​கப்​படும் மை இருந்​ததை வைத்து இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

இந்த நிலை​யில் இந்த விவ​காரம் தொடர்​பாக சிபிஐ​யிடம் இந்​திய தேர்​தல் ஆணை​யம் புகார் அளிக்க வேண்​டும் என்று திமுக எம்.பி. வில்​சன் கோரிக்கை விடுத்​தார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதிவு விவரம்: நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், வெளி​நாட்டு குடி​யுரிமை கொண்ட சுமார் 25 பேர் முறை​கே​டாக வாக்​களித்​தது கண்​டறியப்​பட்டு காவல்​துறை​யால் கைது செய்​யப்​பட்​டுள்​ள​தாக கிடைத்​துள்ள தகவல் அதிர்ச்​சி​யளிக்​கிறது.

தவறான அல்​லது போலி ஆவணங்​கள் மூலம் தாங்​கள் இந்​திய குடிமக்​கள் என்று காட்​டிக்​கொண்​டு, எஸ்​ஐஆர் மூலம் இவர்​கள் தங்​கள் பெயர்​களைச் சேர்த்​து, தேர்​தல் ஆணை​யத்​தையே ஏமாற்றி மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ளனர்.

இத்​தகைய நிகழ்​வு​கள் வாக்​காளர் பட்​டியலின் நம்​பகத்​தன்​மை​யை​யும், ஒட்​டுமொத்த தேர்​தல் நடை​முறையை​யும் நேரடி​யாகப் பாதிக்​கிறது.

வாக்​கெடுப்​புக்கு முன்​னும் பின்​னும் நடை​பெறும் குடியேற்​றம்​ (Immigration), வெளி​யேற்​றம் (Emigration) குறித்த தகவல்​கள் மத்​திய உள்​துறை அமைச்​சகத்​தின் கீழ் செயல்​படும் குடிவர​வுப் பிரி​விடம் உள்​ளது.

எனவே, இந்த மிகப்​பெரிய அளவி​லான தேர்​தல் மோசடி குறித்து சிபிஐ அமைப்​பால் மட்​டுமே விரி​வான விசா​ரணையை மேற்​கொள்ள முடி​யும்.

அதனால் இதுகுறித்து சிபிஐ​யிடம் தேர்​தல் ஆணை​யம் புகார் அளித்​து, இந்த விவ​காரத்தை முழு​மை​யாக விசா​ரணை செய்ய வேண்​டும்.

தேர்​தலில் வாக்​களித்த அந்த வெளி​நாட்​ட​வர்​கள் மீது கடுமை​யான நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். மேலும், தேர்​தல் ஆணை​யம் வெளி​நாட்டு குடிமக்​கள் இந்​தி​யா​வில் வாக்​களிப்​பதை தடுக்க கூடு​தல் விழிப்​புணர்​வுடன் இருப்​பதுடன், அதற்​கான வலு​வான ஒழுங்​கு​முறை​களை​யும் உரு​வாக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

இதையடுத்து தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் சட்​ட​விரோத​மாக வெளி​நாட்டு குடி​யுரிமை பெற்​றவர்​கள் வாக்​களித்​தது குறித்து தேர்​தல் ஆணை​யம் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ள​தாக தகவல்​கள் கிடைத்​துள்​ளன.

தேர்​தல் ஆணை​யத்​தின் நடவடிக்​கைக்கு மகிழ்ச்சி அளிப்​ப​தாக​வும், இந்​தக் குற்​றச் செயலில் ஈடு​பட்ட அனை​வரும் நீதி​யின் முன் நிறுத்​தப்பட வேண்​டும் எனவும் எம்​.பி. வில்​சன்​, தனது மற்​றொரு எக்​ஸ்​ பதி​வில்​ தெரி​வித்​துள்​ளார்​.

தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் இந்தியர்கள்: ஆணையம் விசாரணை நடத்துவதாக திமுக எம்.பி. தகவல்
காங்கிரஸில் யாருக்கு அமைச்சர் சீட்? - ராஜேஷ்குமார், விஸ்வநாதனுக்கு வாய்ப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in