நீட் தேர்வை கண்டித்து 22-ல் தி.க. வாகன பேரணி

கி.வீரமணி
கி.வீரமணி
Updated on
1 min read

ராஜபாளையம்: நீட் தேர்வை கண்​டித்து ஆக. 22-ம் தேதி முதல் தமி​ழ​கத் தில் 6 இடங்​களில் இருசக்கர வாகன பேரணி நடத்​தப்​படும் என்று திரா​விடர் கழக தலை​வர் கி.வீரமணி தெரி​வித்​தார்.

ராஜ​பாளை​யத்​தில் நடந்த பொதுக்​கூட்​டத்​தில், அவர் பேசி​ய​தாவது: ரூ.100 கோடி மதிப்​பில் பெரி​யார் உலகம் திட்​டம் செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. பெரி​யா​ரின் 150-வது பிறந்த நாள் விழா​வின்​போது இத்​திட்​டத்​தின் முக்​கிய பணி​கள் நிறைவு பெற்​றிருக்​கும். நீட் தேர்வை திணிக்க துடிக்​கின்​ற​னர்.

ஊழலை ஒழிக்க வந்​த​தாக கூறிய நீட் தேர்​வு, ஊழலின் தந்​தை​யாக உள்​ளது. நீட் தேர்வை கண்​டித்து ஆக. 22-ம் தேதி முதல் 6 இடங்​களில் இருசக்கர வாகனப் பேரணி நடை​பெற உள்​ளது.

தொகுதி மறு​வரையறை மசோ​தாவை கொண்​டுவர முயற்​சிக்​கின்​ற​னர். நாடாளு​மன்​றத்​தில் 3-ல் இரண்டு பங்கு பெரும்​பான்​மையை பெற்ற பின்பு அம்​பேத்​கர் உரு​வாக்​கிய அரசி​யல் சட்​டத்தை அகற்​றி​விட்​டு, மனு தர்​மத்​தை கொண்​டு வர துடிக்​கின்​ற​னர். இவ்​​வாறு அவர்​ பேசி​னார்​.

கி.வீரமணி
உதயநிதி Vs நிர்மல் குமார்: பேரவையில் வார்த்தைப் போரால் பரபரப்பு - தவெக, திமுக உறுப்பினர்கள் கூச்சல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in