மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: மே தினத்​தையொட்டி வரும் 1-ம் தேதி​யன்​று, சென்னை மாவட்​டத்​தில் மது​பானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது, மீறி​னால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என சென்னை ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த் ஜகடே எச்​சரித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:மே தினம் வரும் வெள்​ளிக் கிழமை (மே 1) கொண்​டாடப்​படு​கிறது. இதை முன்​னிட்டு சென்னை மாவட்​டத்​தில் மே தினத்​தன்று மதுபானம் விற்​பனை செய்​யக்​கூ​டாது.

தமிழ்​நாடு மது​பான சில்​லறை விற்​பனை விதி​கள் மற்​றும் தமிழ்​நாடு மது​பான உரிமம் மற்​றும் அனு​மதி விதி​கள் ஆகிய​வற்​றின் கீழ், சென்னை மாவட்​டத்​தில் உள்ள அனைத்து டாஸ்​மாக், மது​பான சில்​லறை விற்​பனை கடைகள் மற்​றும் பார்​கள், உரிமம் பெற்ற கிளப் பார்​கள், ஹோட்​டல் பார்​கள், மது​பான விற்​பனையகங்​கள், மது​பானக் கூடங்​கள் அனைத்​தும் அன்​றைய தினம் இயங்​கக்​கூ​டாது. கண்​டிப்​பாக மூடப்​பட்​டிருக்க வேண்​டும்.

இந்த உத்​தரவை மீறி மது விற்​பனை​யில் ஈடு​பட்​டால், அவர்​கள் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்.

மே தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது: மாவட்ட ஆட்சியர் உத்தரவு
கொசுத் தொல்லை தொடர்பாக புகார்கள் வந்தால் 48 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐகோர்ட்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in